Saturday, June 5, 2021

அய்யோ மாலன்!

 




இப்படியாகி விட்டதே மாலன்!

இனி நாங்கள் எங்கே செல்வோம்? யாரிடம் கேட்போம்?

சங்கிகள் ஆழம் பார்க்க பயன்படுத்தும் குரங்குக்குட்டியான உங்கள் குரங்குக்குளியல் என்னவென்று எப்படி அறிந்து கொள்வோம்?

வார்த்தை வியாபாரி என்பதற்கான அடையாளமாக மாறிப் போனவர் நீங்கள். மாலன் எழுதுவது போல மனசாட்சியில்லாமல் எழுதுபவர்கள்தான் வார்த்தை வியாபாரிகள், எழுத்தை விற்பவர்கள் என்று உங்களின் ஒவ்வொரு பதிவையும் காண்பித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தோமே, இனி என் செய்வோம்?

நேற்றே உங்களின் திமிர்த்தனமும் வன்மமும் ஆணவமும் நிறைந்த ஒரு பதிலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்தேன். அது பற்றி தனியாக எழுதுகிறேன். அந்த ஸ்க்ரீன் ஷாட் தான் நான் இறுதியாக எடுத்த உங்கள் ஸ்க்ரீன் ஷாட்டா? இனிமேல் வாய்ப்பு கிடையாதா?

ஏன் மாலன்? ஏன்? 

இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவே இல்லையே?

ஏன் மாலன்? ஏன்?

என்ன நடந்தது மாலனுக்கென்று புரியவில்லையா?



மோடியின் விளம்பர தூதுவர் மூத்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலன் தன் முகநூல் பக்கத்தை மூடி வைத்து விட்டார். அவரது நண்பர்கள் பட்டியலில் இல்லாத யாரும் அவரது பதிவுகளை பார்க்க முடியாது. 


அவரை விமர்சனம் செய்து எழுதத்தொடங்கும் முன்பே அனுப்பிய நட்பழைப்பை அவர் மறுத்து விட்டார். 

தமிழ்நாடு என்பதை மாற்ற வேண்டும் என்ற பதிவிற்காக அவரது நண்பர்கள் பட்டியலில் இருந்தவர்களே அவரை புரட்டி எடுத்திருந்தனர். 

அதனால் மேஜர் மாலன் பயந்து போய் பதுங்கு குழிக்குள் போய் விட்டார் போல.

மனசாட்சியில்லாத ஜென்மங்கள் அச்சத்துடன்தான் வாழ வேண்டும்.

பிகு: மாலன் ரசிகக் கண்மணிகளுக்கு நற்செய்தி இருக்கிறது.

முகநூலில் மாலன் பக்கம் என்ற அவரது பக்கம் இன்னும் மூடப்படவில்லை. அதன் இணைப்பு இங்கே மாலன் பக்கம்

அங்கே சென்று பதிவிட்ட பின்னூட்டம் இங்கே



அவரது ட்விட்டர் பக்கம் உயிர்ப்போடுதான் உள்ளது. டிசம்பருக்குப் பிறகு பதிவுகள்தான் இல்லை.


No comments:

Post a Comment