Thursday, June 17, 2021

குழுவே வெறி கொண்டு அலையுது. . .

 



 “மத்யமர்” எனும் முகநூல் குழு பற்றி பல முறை எழுதியுள்ளேன். முப்பத்தி ஆறாயிரம் உறுப்பினர்கள் என்று சொல்கிறார்கள். அவர்களில் கிட்டத்தட்ட தொன்னூறு சதவிகிதம் மோடி மோகிகள்தான். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் மு.க.ஸ்டாலினையும் அதிகபட்ச அளவு இழிவு படுத்துவதையே முழு நேர பிழைப்பாகக் கொண்ட வன்மம் மிகுந்த சங்கிகள் நிரம்பிய குழு அது. அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களை திட்டுவது ஒரு உப தொழில். திராட்சை கிட்டாத நரிகளும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களும் இந்த உப குழுவில் உள்ளவர்கள்.  அதிகார வர்க்க திமிரில் ஆட முயன்றவர்களுக்கு முட்டுக்கட்டையாக தொழிற்சங்க இயக்கம் இருப்பதால் தொழிற்சங்கத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசுபவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட ஆட்கள் கொண்ட இந்த மத்யமர் குழுவில்  சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து பல மத்யமர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல எழுதுகிறார்கள். தேர்தல் தோல்வியில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை.

 அதே நேரம் மோடியைப் போல் ஒரு தெய்வம் இல்லை என்று மூடத்தனமாக புகழ் பாடும் கூட்டம் அது. மோடியை ஒரு வரி விமர்சனம் செய்தாலே உங்கள் டி.என்.ஏ சோதிக்கப்பட்டு உங்களுக்கு தேசத்துரோகி பட்டம் கொடுக்கப்பட்டு விடும்.

 எல்.ஐ.சி பங்கு விற்பனையில் தனியாக ஒரு மசோதா கொண்டு வரக் கூட அச்சப்படுகிற அரசு மோடி அரசு என்று ஒரு பதிவிட்ட போது என் கேள்விக்கு ஒருவராலும் பதில் அளிக்க முடியவில்லை. ஆனால் “மோடி மோகிகள் அயோக்கியர்களாகவோ அடி முட்டாளாகவோதான் இருக்க முடியும்” என்ற என் மதிப்பீட்டை உறுதிப்படுத்தி பின்னூட்டமிட்டார்கள். இருநூறு ரூபாய் உடன் பிறப்பு என்று அவர்களே எனக்கு முத்திரையும் குத்தி விட்டார்கள்.

 இந்த அளவு காழ்ப்புணர்வுக்கு யார் ஊக்கம் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்றுதான் விடை கிடைத்தது.

 தந்தை பெரியார் பற்றிய ஒரு பதிவுக்கு மத்யமர் குழுவின் அட்மின் சங்கர் ராஜரத்தினம் போட்ட பின்னூட்டத்தை பாருங்கள்.

 


தலை எப்படி இருக்குமோ அப்படித்தானே வால்களும் இருக்கும்! தந்தை பெரியாரின் சீடர்தான் எம்.ஆர்.ராதா என்ற புரிதல் இல்லாதவராக வேறு இருக்கிறார். எவ்வளவு கேவலமான ஒப்பீடு!

 காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்!

 நான் அவருக்கு ஒரு பின்னூட்டமும் போட்டேன். அது கீழே



 இவ்வளவு மோசமாக ஒரு குழுவில் நான் ஏன் இன்னும் தொடர்கிறேன்?

 



இது போன்ற காமெடியை எல்லாம் இழக்க முடியுமா?

 ஆனால் இந்த குழு மிகவும் ஆபத்தான குழு. ஜாதி வெறியையும் மத வெறியையும் அப்பட்டமாக தூண்டுகிற குழு.  மக்கள் ஒற்றுமையை குலைக்க தொடர்ந்து முயற்சிக்கும் சில மனித குல எதிரிகள் செயல்படும் குழு. அவர்களில் பலர் கிசோர்.கே.சாமி, ஸ்டான்லி ராஜன், போர்ட் தாஸ் ஆகியோரை விட அபாயகரமானவர்கள்.

 இன்னும் கூட சில விஷயங்கள் உள்ளது. அவற்றை பின்பு எழுதுகிறேன்.

2 comments: