Friday, June 25, 2021

சங்கிங்க பிரச்சினையே இதுதான் . . .

 முதலமைச்சர் என்று அழைக்காமல், ஆளுனருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர்  என்றுதான் சொல்ல வேண்டும் என்ற அபத்தமான ஒரு பதிவைப் பற்றித்தான் காலையில் எழுதியிருந்தேன். கற்பனை உலகில் வாழும் சங்கிகள் நிஜ உலகிற்கு வருகையில் உண்மையை சகிக்க முடியாமல் புலம்பித் தள்ளுகின்றனர். திமுகவின் வெற்றிக்குப் பிறகு தமிழகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.  மு.க.ஸ்டாலின் முதல்வரானதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன இந்த சங்கிகளுக்கு எல்லாம் இதயம் என்பதே கிடையாததால் யாரும் இதய வலி வந்து இறந்து போகவில்லை.

 நேற்று நடந்த காஷ்மீர் பேச்சுவார்த்தை பற்றி ஒரு பதிவை பார்த்தேன்.



 காஷ்மீர் நிலைமை பற்றிய புரிதல் பூஜ்ஜிய அளவு கூட இல்லாதவர்கள் என்பது படிக்கும் போதே தெரிகிறது. மோடி ஒரு வெத்து வேட்டு என்பதை புரிந்து கொள்ளும் அறிவற்ற மூடர்கள்.

 இந்த கார்ட்டூன் நிலைமையை அப்பட்டமாக சொல்கிறது.

 


பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மோடிதான்.

 மோடி சொன்ன எதையும் அவர்கள் ஏற்கவில்லை.

அரசியல் சாசனப்பிரிவு 370 ன்ன் மூலம் கிடைத்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அது நீதிமன்றத்தில் இருப்பதால் மோடியோடு அது பற்றி பேச முடியாது.

பழையபடி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

 

இதுதான் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. அங்கே யாரும் மோடியைக் கண்டு அஞ்சவோ, நடுங்கவோ இல்லை.

 

மோடிதான் காஷ்மீர் கட்சிகளை கண்டு நடுங்குகிறார்.

 அது மட்டுமல்ல இப்போது காஷ்மீர் பற்றி மோடி இக்காலகட்டத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன.

 இந்து நாளிதழில் திரு சுரேந்திரா வரைந்த கார்ட்டூன் சொல்கிறது காரணத்தை.

 


காஷ்மீரைக் காண்பிப்பது   என்பது   மற்ற பிரச்சினைகளிலிருந்து  மக்களின் கவனத்தை  திசை திருப்ப மட்டுமமே மோடிக்கு உதவும்.

 


No comments:

Post a Comment