Tuesday, June 22, 2021

தாலிபனுடன் என்ன டீலிங் மோடி?


இப்போதுதான் ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

கத்தார் நாட்டின் சிறப்பு தூதர் "முத்லக் பின் மெஜெத் அல் கொரானி"  என்பவர் ஒரு கருத்தரங்கில் சொன்ன அதிர்ச்சி தகவல்.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபன் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைமையை  இந்திய தூதுக்குழு இரண்டு முறை சந்தித்து விவாதித்துள்ளது. அந்த சந்திப்பு நடந்த நேரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தோஹாவில்தான் இருந்துள்ளார்.

இது பற்றி விளக்கம் கேட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் பதில் சொல்ல மறுத்து விட்டதாம்.

ஒரு பயங்கரவாதக்குழுவோடு மோடி அரசு விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன விவாதித்தது? உண்மைகளை மறைப்பது ஏன்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வராது என்பதற்காக நம்மால் கேட்காமல் இருக்க முடியாதல்லவா?

பாமியான் புத்தர் சிலையை உடைத்த தாலிபனும் பாபர் மசூதியை இடித்த பாஜவும் ஒன்றுதானே!

அவர்களுக்குள் ஏதாவது தொழில் நுட்ப பரிமாற்றம் ஏதாவது இருக்கும்!

 

1 comment:

  1. Hindu talibansum original talibansum meet Pannaa enna paesa poraanga? Eppadi religion'a use panni makkala terrorize pannalaamnu than.

    ReplyDelete