Monday, June 21, 2021

லட்சத்தீவு - பயமே சாட்சி


 மோடியின் ஆட்சியில் புதிதாக சீரழிக்கப்பட்டுக் கொண்டு வரும் லட்சத்தீவு குறித்த புதிய செய்தி ஒன்று இன்று வந்துள்ளது.

லட்சத்தீவு இப்போது கேரள உயர் நீதி மன்ற எல்லைக்குக் கீழே வருகிறது. அதாவது லட்சத் தீவு மக்களுக்கான உயர் நீதி மன்றம் கேரள நீதிமன்றம்.

மோடியின் நண்பனான பிரபுல் கோடா படேல், லட்சத்தீவை, கேரள உயர் நீதி மன்ற ஆளுகையிலிருந்து கர்னாடக உயர் நீதி மன்ற ஆளுகைக்கு மாற்றும் முன்மொழிவை அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி பாஜக அதனை அமலாக்கவும் செய்யவும்.

இப்போது மாற்றத்திற்கான தேவை என்ன?

பிரபுல் கோடா படேலின் ஒழுங்கீனமான நடவடிக்கைகள், மக்கள் விரோத நடவடிக்கைகள், லட்சத்தீவின் இயற்கை வளத்தை சீரழிக்கும் நடவடிக்கைகள் என பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் கேரள உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு குறுக்கு வழி. கர்னாடகத்தில் இருப்பதும் பாஜக ஆட்சிதான்.

ஆனால் இப்படி ஒரு மாற்றம் வருமானால் பிரபுல் கோடா ப்ட்டேல் லட்சத்தீவை விட்டு ஒழிந்தாலும் கூட  அந்த மக்களுக்கு பாதிப்பே. ஏனென்றால் அவர்களின் தாய் மொழியும் பேச்சு மொழியும் மலையாளம்தான்.

லட்சத்தீவில் அராஜக ஆட்சிதான் நடக்கிறது என்பதற்கு வழக்குகளை சந்திக்க பிரபுல் கோடா பட்டேல் பயப்படுவதே சாட்சி.

மோடியே ஒரு பயந்தாங்குள்ளிதான், அவர் நண்பர் மட்டும் வீரனாகவா இருப்பார்!

3 comments:

  1. மோடியை பயந்தாங்குள்ளி என்று சொல்லும் முதல் நபர் நீங்கள் தான். அன்புடன் ஸ்ரீநாத்..

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்க வேற. பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த தைரியமில்லாத கோழை என்று ஆயிரக்கணக்காவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா? மேலும் நாடாளுமன்ற நடைமுறைகள் சந்திக்க அஞ்சும் ஒரே கோழைப் பிரதமர் மோடி மட்டுமே!

      Delete
    2. இந்த பதிவை கொஞ்சம் படியுங்கள்
      https://ramaniecuvellore.blogspot.com/2021/02/blog-post_85.html

      Delete