Wednesday, June 16, 2021

சி.ச.பாபாவுக்காக யாரெல்லாம்?


 சாமியார் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு விட்டார். மகிழ்ச்சி.

போலிச்சாமியார் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் இன்று எல்லா சாமியார்களுமே போலியாகத்தான் இருக்கிறார்கள்.

நான் ஆவலோடு எதிர்பார்ப்பது சிவசங்கர் பாபாவுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கப் போகிறார்கள் என்று.

கிஷோர் கே சுவாமி என்ற கஞ்சா மன நோயாளி பல வருடங்களாக அவதூறு பரப்புவதையே தொழிலாக செய்து கொண்டிருந்தான். அவனை கைது செய்ததற்கே சங்கிகள் பலர் பொங்கி விட்டார்கள்.

ஆட்சியையே கலைக்க வேண்டும் என்றெல்லாம் மத்யமர் சங்கிகளில் இருந்து மாரிதாஸ் வரை எழுதித் தள்ளினார்கள்.

இப்போது சிவசங்கர் பாபா எனும் பாலியல் குற்றவாளிக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்ப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

பாலியல் குற்றவாளியை ஆதரிப்பவர்களுக்கும் அடிப்படையில் பாலியல் குற்றம் செய்யும் நோக்கம் ஒளிந்து கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட எதிர்கால குற்றவாளிகளை அடையாளம் கொண்டு சமூகத்திற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.

பிகு: போலிச்சாமியார்களை அம்பலப்படுத்தும் விவேக் காமெடி, யாகவா முனிவர், சிசபாபா மோதல் நினைவில் உள்ளதா?

அதனை கண்டு களியுங்கள்


மயில்சாமி முகம் சிசபாபா போலவே உள்ளதல்லவா?



No comments:

Post a Comment