Tuesday, June 1, 2021

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவரு?

 


மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் 31.05.2021 அன்று ஓய்வு பெற வேண்டும். அவருக்கு பணி நீட்டிப்பு கேட்கிறது மாநில அரசு. மூன்று மாதம் கொடுக்கிறது மத்தியரசு.

இடையில் மம்தா - மோடி பிரச்சினை நாடகம் நடந்ததால் அந்த த.செ வை டெல்லிக்கு மாற்றுகிறது மத்தியரசு. 

அதெல்லாம் முடியாது. அவர் இங்கேதான் இருப்பார் என்று அடம் பிடிக்கிறது மம்தா ஆட்சி.

நாங்க போட்ட ஆர்டர் போட்டதுதான், அவரு டெல்லிக்கு வந்தே ஆகனும்னு முரண்டு பிடிக்குது மோடி அரசு.

எனக்கு உங்க பதவி நீடிப்பே வேணாம், நான் இன்னிக்கே ரிடையர் ஆகறேன்னு த.செ ரிடையராகிட்டாரு.

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீதான் எனக்கு மூன்று வருஷத்துக்கு தலைமை ஆலோசகர்னு பதவி கொடுத்துட்டாங்க மம்தா.

டெல்லிக்கு வராம ரிடையரான உன் மேல ஒழுங்கு நடவடிக்கை பாயும்னு சொல்லுது மத்தியரசு.

ஆமாம் மத்தியரசும் மாநில அரசும் இப்படி அடிச்சுக்கற அளவுக்கு அந்த த.செ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

அதெல்லாம் இல்லை.

மோடியும் சரி, அந்த லேடியும் சரி, இருவருமே கேடிகள், கிரிமினல்கள். அடித்துக் கொள்வது போல நடிக்கவும் செய்வார்கள், அடிக்கவும் செய்வார்கள். இருவருக்கும் எந்த நெறிமுறைகளோ, ஜனநாயக அமைப்புக்களின் மீது நம்பிக்கையோ கிடையாது.

ரௌடிகள் கூட்டம் மோதிக் கொள்ள இப்போது கிடைத்துள்ள காரணம் த.செ. அவ்வளவுதான். 

No comments:

Post a Comment