Thursday, June 3, 2021

தமிழகம் - ஆணியே வேண்டாம் மாலன்

                                  

மூத்த பத்திரிக்கையாளர் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் கீழே உள்ளது. 




"தமிழ் நாடு" என்ற நம் மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது.

"முசல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தேலே தெரியும்" என்ற சொலவடைக்கு ஏற்ப இந்த வார்த்தை வியாபாரி ஏன் இப்போது பிரச்சினையை உருவாக்குகிறார் என்பதை தெளிவாக சொல்ல முடியும்.

தமிழ் நாட்டில் உள்ள நாடு அவர்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. எங்கே தனி நாடாக அறிவித்துக் கொண்டு விடுவார்களோ என்ற கற்பனை அந்த அச்சத்தை அதிகப்படுத்துகிறது. தட்சிணப் பிரதேசம் என்றெல்லாம் பெயரை மாற்றினால் மரண அடி விழும் என்று தெரியும். அதனால் தமிழகம் என்று மாற்றலாமா என்று ஒன்றிய அரசில் உள்ள குரங்குகள் மூத்த பத்திரிக்கையாளர் வடிவில் உள்ள குரங்குக்குட்டி மூலமாக ஆழம் பார்க்க முயற்சிக்கின்றன.

தமிழகம் என்பதை பெரும்பாலும் அனைவருமே இயல்பாகவே பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனாலும் எப்போது சங்கிகள் இப்படி சொல்கிறார்களோ, நாம் மிகவும் எச்சரிக்கையோடு இனி எப்போதும் "தமிழ்நாடு" என்பதையே பேசும் போதும் எழுதும் போதும் பயன்படுத்த வேண்டும்.








No comments:

Post a Comment