Wednesday, June 30, 2021

'மேதகு" - படைப்பும் படைப்பாளியின் வக்கிரமும்

 


“மேதகு” என்று ஓ.டி.,டி. தளத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

 பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

 ஆனால் முகநூலில் படு கேவலமான விஷயங்களை அந்த படத்தின் இயக்குனர் பகிர்ந்துள்ளார். அதை பகிர்ந்து கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் கண்டிப்பாகச் சொல்வேன். நாலாந்தர சிந்தனையின் ஆபாச வெளிப்பாடுதான் அவையெல்லாம்.

 படைப்பாளியின் தனிப்பட்ட செயல்பாடு, சித்தாந்தம் என்பதெல்லாம் முக்கியமில்லை, படைப்பை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற வழக்கமாக ஜெயமோகனுக்கு பாடும் பல்லவியை இப்போதும் அந்த தி.கிட்டுவுக்கும் பாடத் தொடங்கி விட்டனர்.

 பாலியல் குற்றவாளியாய், பெண் பித்தனாய், பொறுக்கியாய் ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் இருந்து கொண்டு பெண்களை போற்றும் காவியத்தை எழுதினால் அவனை ஒதுக்கி விட்டு அந்த படைப்பை போற்ற வேண்டும் என்றால் முடியுமா?

 படைப்பாளியிடமிருந்து படைப்பை ஒதுக்கி வைத்து பார்க்க வேண்டும் என்பதெல்லாம் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கும் கீழ்த்தரமான செயல் அன்றி வேறொன்றுமில்லை.

 மோசமானவனின் படைப்பு எவ்வளவு உயர்தரமாக இருப்பினும் அவனைப் போலவே அதுவும் ஒதுக்கத்தக்கதே!

 

No comments:

Post a Comment