Saturday, January 22, 2022

இப்படி ஒரு கேள்வி !

 


ஊரடங்கு வந்தாலே இப்படித்தான் .
மீன் கடைகளிலும் கறிக்கடைகளிலும்
என்ன கூட்டம்? என்ன கூட்டம்?
ஞாயிற்றுக்கிழமைன்னா
அசைவம் சாப்பிட வேண்டுமென்று
சட்டமா என்ன?  
கால்கள் கடுக்க
நின்று கொண்டு
கைகள் இரண்டில்
சுமக்க முடியாத பைகளோடு
காய்கறிக் கடையில்
பில் போட வரிசையில்
நிற்கும் ஒருவர் கேட்கிறார்
இப்படி ஒரு கேள்வி!
 

பிகு: போன சனிக்கிழமை மாலை காய்கறிக் கடையில் பில் போட வரிசையில் காத்திருந்த போது எனக்கு முன் நின்றிருந்தவர் கேட்ட கேள்வி இது.

No comments:

Post a Comment