Saturday, January 1, 2022

இனிப்பான செய்தியோடு புத்தாண்டு

 


இனிப்பொன்றை செய்து அதன் செய்முறையோடு இந்தாண்டின் முதல் பதிவை எழுதவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். இனிப்பு செய்ய வாய்ப்பில்லாமல் போய் விட்டது. 

ஆனாலும் ஒரு இனிப்பான செய்தியோடு துவங்கும் வாய்ப்பு கிடைத்தது.

 ஒவ்வொரு புத்தாண்டு நாளன்றும் மதுரைக் கோட்டத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், கடந்து போன ஆண்டில் அவர் வாசித்த புத்தகங்களின் பட்டியலை படிப்பதற்கு  ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். 

வாசித்த புத்தகங்களை பதிவு செய்து பட்டியல் போடும் பழக்கும் எனக்கும் அவரிடமிருந்து தொற்றிக் கொண்டதுதான். 

அவர் இன்று வெளியிட்ட பட்டியலில் இரண்டாவது நூலாக எனது "முற்றுகை"யை பார்க்க மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 



நன்றி தோழர் சுப்பாராவ்.

அடுத்த ஆண்டும் அவர் பட்டியலில் இடம் பெறவேண்டும். 

அதற்கு மனதில் ஓடிக் கொண்டிருப்பதற்கு முதலில் எழுத்து வடிவம் தந்து பிறகு நூல் வடிவம் தர வேண்டும். 

புத்தாண்டில் அதனை சாத்தியமாக்க வேண்டும். 

No comments:

Post a Comment