Tuesday, January 4, 2022

அன்னிக்கே தூக்கியிருக்கனும் மோடி

 



இன்றைக்கும் ஒரு கவர்னர் பற்றி எழுத வேண்டியுள்ளது. முந்தைய பீகார், ஒடிஷா, காஷ்மீர் மற்றும் இப்போதைய சத்யபால் மாலிக்கும் ஆரிப் முகமது கான் போல பல கட்சிகளைப் பார்த்து பாஜக வில் செட்டிலானவர்.

நல்லவரா இல்லை கெட்டவரா என்று முடிவு செய்ய முடியாத ஒரு குழப்பவாதி. 

அம்பானியின் கம்பெனிக்கு லாபம் வருவது போல கொண்டு வந்த ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தை  நிராகரித்தவர்.

இரண்டே இரண்டு எம்.எல்.ஏ கொண்ட கட்சிக்காரரை முதலமைச்சராக்க பாஜக கொடுத்த நிர்ப்பந்தத்தை ஏற்காமல் சட்டசபையை கலைத்தவர்.

370 சட்ட நீக்கத்திற்கான பின்புலத்தை தயாரித்துக் கொடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுச்சிறையில் அடைத்த மகானுபாவனும் இந்த மனிதனே!

இவர்தான் மோடியைப் பற்றி நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.

"மோடி மிகவும் அராஜகமானவர்.  நம்முடைய  500 விவசாயிகள் இறந்துள்ளனரே என்று சொன்னதற்கு "எனக்காகவா இறந்தார்கள்?" என்று கிண்டலாகக் கேட்டார். நீதானே ராஜா! உன்னால்தான் இறந்தார்கள் என்று சொன்னேன். எங்களுக்குள் வாக்குவாதம் வந்து விட்டது"

அன்னிக்கு அம்பானி திட்டத்தை நிராகரிச்ச போதே போஸ்டிலிருந்தோ அல்லது உலகத்திலிருந்தோ தூக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா பில்லா-ரங்கா கிரிமினல் கூட்டாளிகளே?

No comments:

Post a Comment