Monday, January 31, 2022

மோடியின் நிபுணர்களும் மோடியைப் போலவே!

 

இவையெல்லாம்தான் சுதந்திரப் போராட்டமா மோடி?

 

சுதந்திரப் போராட்டம் என்பதுதான் இந்தாண்டு குடியரசு தின ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் என்று சொல்லி இருந்தது மோடி அரசு.

 

12 மாநிலங்கள் மற்றும் பல அரசுத்துறைகளின் அலங்கார ஊர்திகள் பவனி வந்தன.

 

ஊர்தியின் கருப்பொருள் என்ன என்பதை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.

 

எந்தெந்த ஊர்தி என்ன கருப்பொருளை சொன்னது என்று பார்ப்போம்.

 

மேகாலயா    -  பெண்கள் முன்னேற்றம்

 

உத்தரப் பிரதேசம் – விஸ்வநாதர் கோயில்

 

உத்தர்கண்ட்  -

 

கோவா   - பாரம்பரியம்

 

சத்திஸ்கர் – பசு மாட்டின் பலன்கள்

 

மகாராஷ்டிரா – பல்லுயிர்களின் பெருமை

 

குஜராத்  - ஆதி வாசிகளின் போராட்டம்

ஹரியானா – விளையாட்டில் முதலிடம்

 பஞ்சாப் – விடுதலைப் போரில் பஞ்சாபின் பங்கு

 கர்னாடகா – கைவினைப் பொருட்கள்

 ஜம்மு காஷ்மீர் – மாறிப்போன முகம்

 அருணாச்சலப் பிரதேசம் – ஆதிவாசிகளின் போராட்டம்

 பொதுப்பணித் துறை – நேதாஜி 125

 கல்வித்துறை  -  புதிய கல்விக் கொள்கை

 அஞ்சல் துறை – பெண்களுக்கு அதிகாரம்

 கலாச்சாரத்துறை  - அரவிந்தர் 150

 ஜவுளித்துறை – தொழில் நுட்ப முன்னேற்றம்

 


















இதிலே பஞ்சாப், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் ஊர்திகள்தான் சுதந்திரப் போராட்டத்தை சொன்னது. குஜராத் ஊர்தியும் ஆதிவாசிகளின் போராட்டத்தை சொல்வதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த வரலாற்றை முதன் முதலில் சொன்னது மோடி என்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது. நேதாஜி 125 என்ற ஊர்தியைக் கூட சுதந்திரப் போராட்டமாக எடுத்துக் கொள்ளலாம். அரவிந்தர் பற்றிய ஊர்தியோ அவரது ஆன்மீகத்தைப் பற்றித்தான் சொல்லியது.

 ஆக சுதந்திரப் போராட்டத்தை உலகிற்கு சொல்லும் ஊர்திகள்தான் இந்த ஆண்டின் கருப்பொருள் என்று சொன்னதை பெரும்பாலான மாநிலங்களும் அரசுத்துறைகளும் மதிக்கவில்லையா அல்லது மோடி அரசு நியமித்த நிபுணர் குழுவிற்கு சுதந்திரப் போராட்டம் பற்றிய அறிவே அவ்வளவுதானா?

 மோடி எவ்வழியோ, நிபுணர்களும் அவ்வழி.

 மோடி நியமித்த நிபுணர்களும் மோடியைப் போலவே மூடர்களாகத்தானே இருக்க முடியும்!

 பிகு : அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் குறித்து இன்னும் இரண்டு பதிவுகள் வரும்.

 

1 comment:

  1. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்று நிராகரிக்கப்பட்ட ஊர்த்திகளுக்கு விளக்கம் அளித்துவிட்டாரே ஒன்றிய அமைச்சர், "எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று"

    ReplyDelete