Friday, November 26, 2021

மாலன் HIT & RUN குற்றவாளி

 



 மாலன் நல்லா பேசுராருய்யா நியாயம்?

 கரூர் எம்.பி செல்வி ஜோதிமணி ஒரு பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் அலட்சியம் காட்டுகிறார் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார். (அந்த போராட்டம் அவசியமா அல்லது விளம்பர மோகமா  என்ற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை)

 அந்த போராட்டம் நிறைவுக்கு வந்த பின்பு முதல்வருக்கும் மற்றவர்களுக்கும் நன்றி சொல்லி பதிவெழுதுகிறார்.

 தன் முக நூல் பக்கத்தை பூட்டி வைத்து விட்டு அடுத்தவர் பக்கங்களில் வந்து பின்னூட்டமிட்டு தனது மோடி விஸ்வாஸத்தை வெளிப்படுத்தி செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் மூத்த்த்த்த்த்த்த்த்த்த மாலன், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தால் குறைந்தா போய் விடுவீர்கள் என்று குதர்க்கம் பேசுகிறார்.

 தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஏதோ ஒரு நல்ல திட்டம் அறிமுகமான போது அரசுக்கோ முதல்வருக்கோ பாராட்டு தெரிவிக்க மனமின்றி “இறையன்பிற்கு நன்றி” என்று பதிவு போட்டவர்தான் இந்த நியாயஸ்தன் என்பதை அவர் மறந்திருக்கலாம்.

 ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். எங்கே போச்சு உமது நியாயம் என்றொரு பின்னூட்டமும் போட்டேன்.

 

ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

 ஏனென்றால் மாலன் தாக்கி விட்டு தப்பி ஓடும்  HIT & RUN  குற்றவாளி.

 

 

No comments:

Post a Comment