Saturday, November 13, 2021

வெ.மா.ரோ.சூ.சொ இல்லா சங்கிகள்

 



கீழே உள்ள அம்மையார் பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர்.

 


அவர் முகநூலில் பகிர்ந்த தகவல் கீழே.

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத தோழர்கள் பலர் இணைந்து நிதி திரட்ட அதனைக் கொண்டு ஒரு தன்னார்வலர் தோழர் ஒருவர் நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை சேர்க்க

 அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவா பாரதி செய்ததாக கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அந்த அம்மையார் பதிவு போடுகிறார். அம்பேத்கரியவாதியான அந்த ஆனந்த் வாசுவே அதிர்ச்சியோடு யாரம்மா நீ என்று கேட்டுள்ளார். 

 


சங்கிகளுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கழுவி கழுவி ஊற்றிய பிறகும் பதிவு அப்படியே இருக்கிறது.

 மக்களுக்கு இவர்களால் எந்த நன்மையையும் எந்த காலத்திலும் செய்ய முடியாது. பெரு முதலாளிகளின் தரகரான மோடியின் கட்சி உறுப்பினர்கள் மட்டும் உத்தமர்களாகவா இருப்பார்கள்.

 இந்த பிழைப்புக்கு பதிலாக  . . . . . . அந்த எழவை நான் ஏன் என் வாயில் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment