Thursday, November 25, 2021

இது வேறு மழை

 


இன்று காலை முகநூலில் எழுத்தாளர் புதிய மாதவி அவர்கள், தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ஒரு கவிதையை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இது நாள் வரை எழுதிய மழைக் கவிதைகளுக்காக வெட்கப்பட்ட தருணம் இது. நீங்களும் மழையை ரசித்து கவிதைகள் எழுதியிருந்தால் இனி எழுத மனம் துணியாது என்பது நிச்சயம்.

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட 
சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா 

கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க 
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து 
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து 
பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா 

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க 
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

 எதுக்கும் ஏலாம உஞ்செல்லப்புள்ளையோட 
சிறுவாட்டக் களவாண்டு சீவனம் கழிஞ்சிருக்கா 

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா 
வுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே 
ஒண்ணு தெரிஞ்சுக்கோ 
மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு

எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.



2 comments:

  1. what rain (nature) can do with your 'administrative failure'. idiotic! Once upon a time an idiot dreamed for assuring food, cloth and shelter to everyone Now the administration gone in the hands of scoundrels. We are the culprits and not the nature. You commies always missing the target.

    ReplyDelete
    Replies
    1. Idiotic Understanding.
      மழைக்கு பஜ்ஜி போட்டு திங்கும் மேட்டிமை புத்தி.

      Delete