Tuesday, September 14, 2021

கலைஞர் பாணியிலேயே ஸ்டாலின்.

 

திரைக் கலைஞர் தோழர் பொன்வண்ணன் அவர்களின் ஒரு நெகிழ்ச்சியான முக நூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 அநேகமாக அனைத்து நாளிதழ்களையும் கலைஞர் படித்து விடுவார் என்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்களுக்காக அதற்கான உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வார் என்று தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியர்களாக இருந்த தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், தோழர் அ.குமரேசன் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

 அது போல சமூக ஊடகங்களில் வருகிற பதிவுகள் முதல்வரின் கண்ணில் படுவது, அதை எழுதியவர்களை அழைத்துப் பேசுவது ஆகியவை நல்ல அம்சங்களாகும். பாராட்டி எழுதியவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் விமர்சனங்களை படித்து அவை உண்மையென்றால் அவற்றை சரி செய்வதிலும் கவனம் செலுத்திட வேண்டும்.



தமிழ்நாட்டின் குடிமகனாக -
கடந்த ஒருமாத சட்டமன்ற விவாதங்களை,
மக்கள் நலத்திட்டங்களை..தொடர்ந்து கவனித்து வந்தேன்..!
என் மனதுக்கு நெருக்கமான நம்பிக்கைகளுடன்
தமிழக முதல்வரின் கண்களை வரைந்து…

வாழ்த்துகளுடன் இன்று காலையில் பதிவிட்டேன்..!


நான் எதிர்பாராத விதமாக
இன்று இரவு 10.30 மணியளவில் முதல்வர் இல்லத்திலிருந்து
எனக்கு ஒரு அழைப்பு…
முதல்வர் உங்களிடம் பேசவேண்டும் என்கிறார் என்று ..!
தொடர்பில் வந்த முதல்வர் எனது ஓவியத்தை பாராட்டியதோடு…நம்பிக்கை கொண்ட வரிகளுக்கு நன்றியும் தெரிவித்தது

மகிழ்வின் உச்சம்..!.

சிலநிமிடம் தொடர்ந்த உரையாடலில் …

திரைத்துறை சார்ந்தும் ..மற்றும் பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புகளையும் முதல்வரிடம் பகிர்வதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்ததில் மன திருப்தி..!

தங்களின் அன்பிற்கும்..தங்களின் உழைப்பிற்கும்💕💕💕💕💕

No comments:

Post a Comment