Friday, September 10, 2021

முக நூலுக்கு இதிலென்ன பிரச்சினை?

 யாரந்த அல்ப மனிதன்?

மூத்த வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் முக நூல் பதிவினை பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் அவர் வெறுமனே அல்ப மனிதன் என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார். யார் பெயரையும் சொல்லவில்லை. நீங்களாகவே அது சீமான் என்று நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

 





"சசிவர்ணத் தேவர்""என்ற நூலை எழுதிய மருது மோகன் பல ஆண்டுகளுக்கு முன்பு மருது சகோதரர்கள் பற்றி ஒரு திரைப்படம் தயாரிப்பது பற்றி ஆலோசனை நடத்த சென்னையில் ஏற்பாடு செய்து இருந்த ஒரு கூட்டத்திற்கு என்னையும் அழைத்துப் போய் இருந்தார்.

 பலர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில்  நடுநாயகமாக வீற்று இருந்த.புலவர்  புலமைப் பித்தன் அவர்களை அன்று தான் முதன்முறையாகப் பார்த்தேன்.

 வயது முதிர்ந்த சிங்கம் போல வசீகரிக்கும்    கம்பீரத் தோற்றம்.அவரைத் தனித்துவமான ஆளுமையாகக் காட்டியது.

 அப்போது எம்ஜிஆர் பற்றியும் அவர் வீட்டில் தங்க வைத்து இருந்த விடுதலைப்புலிகள் தலைவர் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை கூட்டம் தொடங்குவற்குப் முன்பு அவர் பலரோடு பகிர்ந்து கொண்டார்.

  அவர் சொன்ன தகவல்கள் பலரையும் மெய் மறந்து போக வைத்தது.

 விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனை வீட்டில் வைத்துப் பாதுகாத்த புலமைப்பித்தன் போன்ற   ஆளுமைகள் அதை ஒருநாளும் அவரை ஒரு சில. நிமிடங்கள் மட்டுமே சந்தித்த சில அல்ப மனிதர்களைப் போல "வயிறு கழுவ' பயன்படுத்திக் கொண்டது இல்லை என்பதை நினைத்துப் பார்க்கும் போது தான் புலவர் புலமைப் பித்தனின் .தார்மீகப்  பேராண்மை விளங்குகிறது..

 மேன் மக்கள் என்றும் மேன் மக்களே.அல்பைகள் என்றும் அல்பைகளே.

 "கவிக்கோ சொன்னது போல " அம்மி கொத்துபவன் எல்லாம் சிற்பி போல நடிக்கும் கூத்து தமிழகத்தில் நடக்கிறது..

பிகு: இந்த பதிவு முக நூல் விதிமுறைகளுக்கு முரணானது என்று நீக்குமாறு கூறியதாக தோழர் ஞானபாரதி தெரிவித்திருந்தார். அப்படி என்ன முக நூலுக்கு இதில் பிரச்சினை என்றுதான் தெரியவில்லை. 

No comments:

Post a Comment