Wednesday, September 8, 2021

அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே . . .

 



இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. கவியரசு கண்ணதாசனும் வாலியும் கோலோச்சிய காலத்திலும் பல முத்தான பாடல்கள் மூலம் முத்திரை படைத்தவர். எம்.ஜி.ஆரின் துவக்க கால அரசியலுக்கு பட்டுக்கோட்டையார் பாடல்கள் உதவியது என்றால் திரைத்துறையிலிருந்து தீவிர அரசியல் களத்திற்கு என்ற காலத்தில் உதவியது புலமைப்பித்தனின் பாடல்களே.

திரைத்துறைக்கே உரித்தான பந்தாக்கள் இல்லாத எளிமையானவர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல முறை அவரை கையில் ஒரு சின்னப்பையோடு தன்னந்தனியே பார்த்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்.

 திரு புலமைப்பித்தனை நினைவு கூர்கிற வகையில் அவர் எழுதிய சில பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


 

அமுத தமிழில் எழுதும் கவிதை

 




நாளை உலகை ஆள வேண்டும்

 


இந்த பச்சைக்கிளிக்கொரு 

 


பூமழை தூவி

 


நீங்க நல்லா இருக்கோணும்



அந்தப்புரத்தில்   ஒரு மகராணி

 


மான் கண்டேன், மான் கண்டேன்

 


அமுதே தமிழே

 


செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

 


ஓ வசந்த ராஜா



தமிழே, எனதுயிரே என வாழ்ந்தவருக்கு என் அஞ்சலி


பிகு : மேலே உள்ள பாடல்களில் எம்.ஜி.ஆர் பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையமைப்பிலும் மற்ற பாடல்கள் இளையராஜாவின் இசையிலும் அமைந்தது யதேச்சையான ஒற்றுமையே. 

No comments:

Post a Comment