Thursday, September 30, 2021

ஜல சமாதிக்கு கூவம் போதும்ஜி

 


 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அறிவிக்காவிட்டால் தான் ஜல சமாதி அடையப் போவதாக ஒரு உபி சாமியார் சொல்லியுள்ளார்.

 


அந்த சம்பவம் சீக்கிரம் நடக்கட்டும் என்று எழுதியுள்ள பலரும்  எங்கே அந்த சம்பவம் நடக்கும் என்பதை தெரிவிக்குமாறும் கேட்டுள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நடக்கட்டும், கங்கை யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் நடக்கலாம் என்ற ஆலோசனைகளை வேறு பார்த்தேன். அதில் நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

 

குமரி முனையோஈ அல்லது திரிவேணி சங்கமமோ. இது போன்ற சாக்கடை சாமியார்களின் சடலத்தின் மூலம் மாசுபடுவது சரியல்ல. சடலங்களை அப்படியே இழுத்து விடும்  வாரணாசி கங்கை கூட அவசியமில்லை.

 

கலீஜூ சாமியாருக்கு கலீஜா இருக்கும் கூவம் போதும்.

 

தமிழ்நாட்டில் எதற்கு இப்படி ஒரு சம்பவம் என்று நினைத்தீர்கள் என்றால் ஹைதராபாத் ஹூசைன்சாகர் ஏரியில் மூழ்கட்டும்.

 

முன்பொரு முறை ஏரியின் நடுவே உள்ள புத்தர் சிலையை பார்க்க படகில் சென்ற போது நாற்றம் தாங்க முடியவில்லை. இப்போதும் அந்த நிலை நீடித்தால் அந்த இடம் கூட மிகவும் பொருத்தமே!

No comments:

Post a Comment