Friday, September 17, 2021

வந்தேறியால் கிடைத்த மூன்று கோடி


மதுரை AIIMS. அன்று செங்கல், இன்று ?? 

என்ற தலைப்பில் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு தோழர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளை பதிவிட்டிருந்தேன்.

அதற்கு ஒரு நாம் தமிழர் தம்பி அனாமதேயமாக வந்து 

தமிழன் இல்லாத ஒரு வந்தேறியான மதுரை எம்.பி வழமை போல உளறி கொட்டி இருக்கிறார். தினமும் யாரையாவது குறை சொல்வதை தவிர ஏதும் தெரியாது ஒரு எம்பி அதற்க்கு இந்த வந்தேறியின் சால்ரா.

என்று பின்னூட்டமிட்டிருந்தார்.


அதற்கு உடனடியாக சூடாக பதிலும் கொடுத்து விட்டேன்.

தோழர் சு.வெ எழுப்பிய எந்த பிரச்சினைக்கும் பதில் சொல்ல முடியவில்லை அல்லவா அது போதும். வந்தேறிகள் என்று உங்களால் வர்ணிக்கப்படுபவர்கள் தைரியமாக சொந்த அடையாளத்தோடு எழுதுகிறோம். தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு தமிழனை இழிவு படுத்துகிறார்கள். உமக்காகவே நாளை ஒரு பதிவை பகிர்கிறேன். மோடி அரசை குறை சொன்னால் நாம் தமிழர் தம்பிகளுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுக்குள் என்ன பேக்கரி டீலிங்?


வந்தேறி என்று வர்ணிக்கப்படுகிற தோழர் சு.வெ எடுத்த முயற்சிகள் காரணமாகவே எண்ணற்ற முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மக்களவை உறுப்பினராக அவர் ஆற்றி வரும் பணி சிறப்பாக உள்ளது. அதற்கு ஒரு சிறிய உதாரணமாக எங்கள் தஞ்சைக் கோட்ட தோழரும் தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரனின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.


அதனைப் படித்து விட்டு அந்த அனாமதேயத் தம்பி உடனடியாக பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தோழர் சு.வெ - சீமான் குறித்த ஒரு சிறிய ஒப்பீட்டை இன்று மாலையோ அல்லது நாளையோ செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் சேர்த்து வசை பாடினால் போதும்.

இப்போது தோழர் களப்பிரனின் பதிவை படியுங்கள்.





தோழர் Venkatesan Su அவர்களுக்கு #தஞ்சை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
" சு.வெங்கடேசன் #மதுரை_தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். அவர் பணிகள் பற்றியே அதிகமா பதிவு போடுறீங்களே... அவரால் நம்ம #தஞ்சைத்தொகுதிக்கு என்ன லாபம்..?" என்று நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள் என்னவென்று அறியாத சிலர் அறியாமையால் கேட்பதுண்டு... அப்போதெல்லாம் சிரித்துக்கொண்டே கடந்து போயிருக்கிறோம். சு.வெ. நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கைகளும், குரல்களும் தமிழகம் சார்ந்தது, தென்னிந்தியா சார்ந்தது. அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் வைக்கும் கோரிக்கைகள் எப்போதுமே இந்த நாட்டின் இறையாண்மைக்கான குரல்கள் என்பதை நாங்கள் என்ன இப்படி கேட்பவர்களுக்கெல்லாம் வகுப்பெடுக்கவா முடியும்..?
இருந்தாலும் சமீபத்திய அவரின் கோரிக்கியும், அதன் மூலம் வெளிவந்துள்ள அறிவிப்புகளும் அவரின் மதுரை தொகுதி சார்ந்தது மட்டுமல்ல, அது நம் தொகுதி சார்ந்ததும் தான் என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் போல் இரண்டு வெற்றிகள் அடுத்தடுத்து வந்துள்ளது
பல்கலைக்கழக மானியக்குழு 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ3,22,82,172 வழங்காமல் தாமதப்படுத்தி வந்தது.
நிலுவைத்தொகையை உடனே வழங்குமாறு கோரியிருந்தார் சு.வெ.
அவரின் கோரிக்கையை ஏற்று முழுத்தொகையையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்த தாம்பரம் - செங்கோட்டை; தஞ்சையை கடந்தே செல்ல உள்ளது. அதுவும் பகல் நேரத்தில்... அதே போல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம்; திருவாரூர் - காரைக்குடி என்ற இரயில்களும் நம் தொகுதிக்கானது.
தோழர் சு.வெ.அவர்களுக்கு தஞ்சை தொகுதி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
---------------------------------------------------------------
தமிழ் பல்கலைக்கழகத்திற்கு
ரூ 3,22,82,172 ஐ வழங்கியது மானியக்குழு - சு.வெங்கடேசன்
கோரிக்கை ஏற்றமைக்கு நன்றி.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, பல்கலைக்கழக மானியக்குழுவின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ 3,22,82,172 தொகை வர வேண்டிருந்தது. பல்கலைக்கழகம் கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இத்தொகையை பெற்றுத்தர கல்வித்துறை நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தாங்கள் முயற்சி செய்து உதவுமாறு பல்கலைக்கழகத்தின் தரப்பில் இருந்து என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகம், மானியக்குழுவுக்குத்தர வேண்டிய தொகையை கழித்துக்கொண்டு மீதித்தொகையையாவது விரைவாக பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு மானியக்குழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதி,தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று 12 ஆவது மானியக்குழு வழங்க வேண்டிய ரூ 3,22,82,172 ரூபாயை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------
ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு.
மதுரையை மையப்படுத்திய ஐந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி.
-சு.வெங்கடேசன் எம்.பி.,
சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று இரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின் பொதுப்பெட்டிகளைக் கொண்ட விரைவு இரயில்களை இயக்கினார்கள். அதனை வரவேற்றேன். சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை ஏற்று மூன்று சாதாரண பயணிகள் இரயிலையும், மூன்று விரைவு இரயில்களையும் இயக்க தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே வாரியத்திடம் கோரியுள்ளது.
புதிதாக இயக்க உள்ள பயணிகள் இரயில்கள்:
1. மதுரை - போடிநாயக்கனூர்
2. திண்டுக்கல் - கோவை
3. திருவாரூர் - காரைக்குடி.
புதிதாக இயக்கவுள்ள விரைவு இரயில்கள்.
1.தாம்பரம் - செங்கோட்டை
2. மதுரை - இராமேஸ்வரம்
3. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
இவைத்தவிர சென்னை சென்ட்ரல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு வண்டியை போடி நாயக்கனூர் வரை நீட்டிக்க வேண்டுமென்றும், திருவனந்தபுரம் முதல் மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு வண்டியை இராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும் தென்னக இரயில்வே அனுமதி கோரியுள்ளது.
தென்னக இரயில்வேயின் இக்கோரிக்கையை இரயில்வே வாரியம் ஏற்று விரைவாக உத்தரவிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தென்னக இரயில்வேயின் இந்த கோரிக்கைகளில் ஐந்து வண்டிகள் மதுரை சார்ந்து இயங்கும் வண்டிகளாக இருப்பதால் எனது நன்றியை தென்னக இரயில்வேக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

1 comment:

  1. நல்ல செருப்பை எடுத்து அடிக்கவும்.
    விஜய் லட்சுமி யின் கொழுந்தன் மாருக்கு பிய்ந்து செருப்பை வைத்து அடிக்க வேண்டாம்.
    அதை ஆமைக்கறியோனுக்கு பத்திரப் படுத்தி வைத்து கொள்ளவும்.

    ReplyDelete