Tuesday, October 16, 2018

நினைப்புதான் சங்கிங்க பிழைப்ப . . .


நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம் . . .

இது யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, சங்கிங்களுக்கு, அதுதாங்க, காவிக் கயவர்களுக்கு நல்லாவே பொருந்தும்.

சங்கிகளை அம்பலப்படுத்தும் பல பதிவுகளுக்கு ஒரு சங்கி வந்து பின்னூட்டம் போடும். 

நான் எழுதறது தமிழில். ஆனா அந்த சங்கியோ ஏதோ இங்கிலாந்து குடிமகன் போல, சசி தரூர் தம்பி மாதிரி ஆங்கிலத்தில் மட்டுமே பின்னூட்டம் போடும்.

அது விஷயமில்லை.

அந்த சங்கிக்கும் சரி, மற்ற காவிக்கயவர்களுக்கும் என்ன ஒரு நினைப்புன்னா

காவிக்கயவர்கள்தான் தேச பக்தர்கள்,

அவங்கதான் தேசத்தை பாதுகாக்க பிறந்தவங்க,

மத நல்லிணக்கம் என்பது கெட்ட வார்த்தை.

கம்யூனிஸ்டுங்க எல்லாம் சீன அடிமைங்க.

இதைத்தான் அந்த அனானியும் சரி, மத்த சங்கிங்களும் திரும்ப, திரும்ப வாந்தி எடுப்பாங்க. 

புதுசா எழுதக்கூட அவங்களுக்கு தெரியாது. 
எந்த உண்மைகளும் அவர்களுக்கு புரியாது.
புரியாத அளவில் போதையிலேயே வைத்திருப்பதுதான் காவிக் கயவர்களின் தலைமை பீடத்தின் சாமர்த்தியம்.

காவிக்கயவர்கள் யார்?


என்ற மேலே உள்ள இணைப்பில் விரிவாக எழுதியுள்ளேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்

மதவெறியை தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள்.

மதத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துபவர்கள்.

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்.

ஜனநாயகத்தின் மீதும் கருத்துரிமை மீதும் நம்பிக்கை இல்லாத பாசிஸ்டுகள்.

இந்திய செல்வங்களை உள்நாட்டு, அன்னிய முதலாளிகளுக்கு விற்கும் தரகர்கள்.

காமுகர்கள், ஆணாதிக்க அடிப்படைவாதிகள்.

காமுகர்களை பாதுகாக்கும் கேவலமானவர்கள்.

இந்திய இறையாண்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகு வைத்த அடிமைகள்.

இந்த அவலங்களை எதிர்ப்பதால் கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள்.

தாங்கள் ஆதரிக்கும் கட்சி இவ்வளவு மோசமானது என்பது கூட ஆங்கில அனானி சங்கிக்கும் அது போன்றதுகளுக்கும் தெரிவதில்லை.

ஏனென்றால் 

முட்டாள்களும் அயோக்கியர்களும் மட்டுமே பாஜகவை ஆதரிப்பார்கள்.

பிகு

யார் சீன அடிமை?

இந்தியாவின் தென் எல்லையாம் குமரியில் கம்பீரமாய் காட்சி அளிக்கும் ஐயன் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியது தமிழகத்தின் சிற்பக் கலைஞர்கள்.

குஜராத்தில் படேல் சிலையை செய்ய சீனாவுக்கு ஆர்டர் கொடுத்தது பாஜக அரசு.

மோடி விளம்பரத் தூதுவராக நடித்த ஜியோ அலைபேசியின் உபகரணங்கள் சீனத்தயாரிப்புதான். 




2 comments:

  1. Boss I too comment in English because I don't have tamil keyboard.no need to get angry at every one commenting in English.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கில பின்னூட்டத்தின் மீது எனக்கு எப்போதுமே கோபம் வராது.
      இந்த பதிவு, ஒரு அனாமதேய காவிக்கயவனுக்கானது. அந்த சங்கி
      எப்போதுமே வன்மத்தை ஆங்கிலத்தில்தான் வாந்தியெடுக்கும்.
      அதற்கான பதிவு இது. ஆனால் இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட வராமல் பதுங்கி விட்டது

      Delete