Monday, October 15, 2018

சிவசேனா கூட்டுத் தற்கொலை – தொலைக்காட்சி வரலாற்றில் . . .





சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் நாங்கள் கூட்டமாக தற்கொலை செய்து கொள்வோம் என்று கேரள மாநில சிவசேனா அறிவித்துள்ளது.

விஜய் நடித்த துப்பாக்கி படத்தை தொலைக்காட்சியில் வெளியிட்டால் நாங்கள் மாஸ் சூஸைட் செய்து கொள்வோம் என்று விஜய் ரசிகர்கள் சில வருடங்கள் முன்பு அறிவித்தது நினைவுக்கு வந்தது.

படம் தொலைக்காட்சியில் வெளிவந்தது,
விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் கலாய்க்கிற அளவிற்கு வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆனால் மாஸ் சூஸைட் அல்ல, சிங்கிள் சூஸைட் கூட நிகழ்ந்ததாக தெரியவில்லை.

விஜய் ரசிகர்கள் அளவிற்கு சிவசேனாகாரர்கள் ஒன்றும் உயிருக்கு பயப்படும் கோழைகள் அல்ல. (அடுத்தவங்க உயிரைப் பற்றித்தான் கவலைப்பட மாட்டார்கள், தங்களின் உயிர் அவர்களுக்கு வெல்லக்கட்டிதான் என்ற உங்கள் மனதில் குரல் என் காதில் சத்தமாகத் தான் ஒலிக்கிறது.

முன் வைத்த காலை பின்வைக்காமல் கூடிய சீக்கிரம் அவர்கள் அறிவித்தபடி கூட்டுத் தற்கொலையை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

எங்கே, எப்போது என்று அறிவித்தால்

டி.ஆர்.பி பசி கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டுத் தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பும் சிறந்த வாய்ப்பை பெறுவார்கள்.

ப்ளீஸ், சீக்கிரம் அறிவியுங்கள் . . .

2 comments:

  1. all nationalists are eagerly waiting to see china boot-licking commie goons castrated and eliminated to protect country.

    ReplyDelete
    Replies
    1. உனக்குன்னே ஒரு ஸ்பெஷல் பதிவு.
      அங்க வந்து திட்டை வாங்கிக்க

      Delete