Wednesday, October 17, 2018

சிரிசேனா- மோடி-கொலை முயற்சி


இந்திய உளவுத்துறை RAW தன்னை கொலை செய்ய் முயற்சி செய்கிறது என்றும் அந்த முயற்சி மோடிக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்றும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா, தன்னுடைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதாகவும் அதை பல வழிகளில் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் ஹிந்து நாளிதழின் இன்றைய தலைப்புச் செய்தி கூறுகிறது.

ரா அமைப்பின் சதி மோடிக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதை விளக்க சி.ஐ.ஏ வின் நடவடிக்கைகள் அனைத்தும் டொனால்ட் ட்ரம்பிற்கு தெரியுமா என்ன என்றும் கூறியுள்ளார்.

சிரிசேனாவை கொல்ல இந்தியா சதி செய்கிறதா? அது மோடிக்கு தெரியுமா, தெரியாதா என்பதல்ல இப்பதிவின் நோக்கம்.

செல்வாக்கை இழந்து வருகிற சிரிசேனா, அதை மீட்க பயன்படுத்தும் உத்தி, மோடி உடையது.

குஜராத் முதல்வராக இருந்த போது போலி எண்கவுண்டர்கள் நடத்தினார்.

இப்போது ஆட்சியின் அந்திமக் காலத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தன்னை கொலை செய்ய சதி செய்கின்றனர் என்று டுபாக்கூர் கடிதங்கள் மூலம் ஐவரைக் கைது செய்து பரபரப்பை உருவாக்க நினைத்தார். அது கடைசியில் காமெடி பீஸாகி விட்டது.

"தன்னை கொலை செய்ய சதி" என்று மோடியின் உத்தியை பயன்படுத்தி செல்வாக்கை தக்கவைக்க முயலும் சிரிசேனாவின் நிலை என்ன ஆகப் போகிறதோ?

மோடியின் வழியை பின்பற்றுவதால், அந்த விசுவாசத்தின் காரணமாக மோடிக்கு தெரியாது என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் போல . . .

3 comments:

  1. Joke of the year. sirisena does not deserve that .He is a nobody in international politics

    ReplyDelete
  2. சிரிசேனாவிற்கு சின்மயி சொன்னவற்றை பார்த்த பின்பு இந்த வகையான ஐடியா தோன்றி இருக்கலாம்.

    ReplyDelete