Sunday, October 14, 2018

சிங்கம் உலவிய திருத்தளத்தில்




குமரியிலிருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தோம்.  திருநெல்வேலிக்கு முன்பா இல்லை நெல்லையை கடந்த பின்பா என்று இப்போது சரியாக நினைவுக்கு வரவில்லை, மேலே உள்ள படத்தில் இருந்த இடத்தில்  கார் திடீரென நின்று விட்டது.

ஓட்டுனரைப் பார்த்தேன்.

“சார், சிங்கம் படத்துல சூர்யா அனுஷ்காவோட முதல் டூயட் இங்கேதான் எடுத்தாங்க. எல்லாரும் இங்கே போட்டோ எடுத்துப்பாங்க.  அதான் சார் நிறுத்தினேன்”



“சூர்யாவோட முதல் பாட்டு, பிரகாஷ்ராஜ் கும்பலோடு கோபத்தோடு வரும் சீன்” எல்லாம் கூட இந்த இடம்தான்”  இன்னும் கூடுதல்  தகவல் வேறு கொடுத்தார்.




பத்து நிமிடத்திற்கு முன்பாக எங்களை வேகமாக ஓவர்டேக் செய்த காரில் இருந்தவர்கள் அங்கே நிதானமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சரி, இப்படி ஒரு புனிதத்தளத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளாவிட்டால் ஏதாவது தோஷம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் கீழே




1 comment: