Wednesday, October 24, 2018

உத்தமர் ஆட்சியின் ஊழல் நாற்றம் . . .





காவிகள் தாங்கள் பெரிய தேச பக்தர்கள் என்று அவ்வப்போது காமெடி செய்வார்கள். கம்யூனிஸ்டுகள், மத நல்லிணக்கவாதிகள், இஸ்லாமியர்கள் ஆகியோரை திட்டுவதைத் தவிர வேறெதுவும் தெரியாத மூளைச்சலவை செய்யப்பட்ட  ஒரு முட்டாள் சங்கி என் வலைப்பக்கத்தில் அந்த வசவுகளை ஆங்கிலத்தில் வேறு வாந்தி எடுக்கும்.

அதே போல சங்கிகளின் இன்னொரு கொடூர காமெடி, அவர்கள் ஊழல் செய்யாத உத்தமர்கள் போல பேசுவதுதான்.

வாஜ்பாய் பத்து நாள் ஆட்சியிலிருந்த போதே “எண்ரான் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் தூக்கி எறிவோம்” என்று பிரச்சாரத்தில் பேசி விட்டு அதே எண்ரானுக்கு கவுண்டர் கேரண்டி ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு மகாராஷ்டிர மாநில மின் வாரியத்தை நஷ்டப்படுத்திய அயோக்கிய சிகாமணிகள் இவர்கள்.

சவப்பெட்டி, யுடிஐ, ராணுவ தளவாட பேரல் ஊழலெல்லாம் வாஜ்பாய் காலத்திய ஸ்பெஷல் ஊழல்கள் என்றால்

அம்பானி, அதானிகளின் தரகர்களாக செயல்படுவது மோடி காலத்து ஸ்பெஷல் ஊழல்.

அதிலே சிகரம் வைத்தது போன்ற ஊழல்தான் ரபேல் போர் விமான ஊழல்.

அந்த ஊழலை மூடி மறைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் உத்தம புத்திரன் மோடி, உச்ச நீதிமன்றம் ரபேல் விபரங்களைக் கேட்க அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா.

இது பொறுக்குமா பதினைந்து லட்சம் ரூபாய் கோட் போடும் ஏழைத்தாயின் மகனுக்கு?

அது மட்டுமா?

மோடிக்கும் அமித்துக்கும் நெருக்கமான ராகேஷ் அஸ்தானா எனும் சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் மீதே கை வைக்க துணிந்து விட்டார் அலோக் வர்மா. லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய மோடியிடமே அனுமதி வேறு கேட்கிறார்.

ராகேஷ் அஸ்தானா என்ன சாதாரண மனிதனா?

மோடியின் ஏவல் நாயாக அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கையை நடத்திக் கொண்டிருப்பவர். அவரை மோடியால் விட்டுத்தர முடியுமா? ஆனால்  அஸ்தானா பெயரோ நாறி விட்டது. இதற்குக் காரணமான அலோக் வர்மாவை அப்படியே விட்டு விட முடியுமா?

அதனால்தான் இரவோடு இரவாக அலோக் வர்மாவை உடனடியாக சி.பி.ஐ இயக்குனர் பதவியிலிருந்து தூக்கி ஊரறிந்த இன்னொரு ஊழல் பேர்வழியான நாகேஸ்வரராவை சி.பி.ஐ இயக்குனராக்கி விட்டார்.

2019 வரை பணிக்காலம் இருக்கையில் அலோக் வர்மாவை மாற்றியது சரியல்ல என்று நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏற சிலர் தயாராகி விட்டார்கள்.

அது பற்றி எல்லாம் கவலைப்படுபவரா மோடி?

வெ.மா.சூ.சொ.ரோ இல்லாதவராயிற்றே!

ஊழல் பேர்வழியை பாதுகாக்க ஊழல் குற்றத்தை நிரூபித்தவர் மீது நடவடிக்கை எடுக்கிற மோடியெல்லாம் உத்தமர் என்று சங்கிகள் காமெடி செய்கிறார்கள்.

இதை சொல்கிற நம்மை தேச விரோதிகள் என்று கொஞ்சமும் கூசாமல் வேறு ஆங்கிலத்திலும் பினாத்துவார்கள்.

5 comments:

  1. No doubt. You should be an urban Naxalite.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. நம்மை தேச விரோதிகள் என்று கொஞ்சமும் கூசாமல் வேறு ஆங்கிலத்திலும் பினாத்துவார்கள்.***** in whatever language said truth is always TRUTH (unmai, sach, nijam, sathyam).

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா நாயே,
      அம்பானி, அதானி கிட்டே பொறுக்கித் தின்னும் தரகர் நாய்களுக்கு
      எங்களைப் பத்தி பேச அருகதையே கிடையாதுன்னு எத்தனை தடவை
      சொன்னாலும் உனக்கு புரியாதா?
      அந்த அளவுக்கு பெரிய முட்டாளாடா நீ?

      Delete