Sunday, December 20, 2020

பதிலுண்டா மாலன்?

 


இன்று வேலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அண்ணல் அம்பேத்கர் வெண்மணி தியாகிகள் நினைவு கருத்தரங்கம் "வீழட்டும் மனு அநீதி, மலரட்டும் சம நீதி" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதிலே அறிமுக உரை ஆற்ற கிடைத்த வாய்ப்பில் "மனு அதர்மத்தின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம். அதை பரப்புகிற வகையில் அரசியல் சாசன தினம் என்று இவர்களே கொண்டாடக் கூடிய நாளில் அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எழுத்து வியாபாரி மாலன் எழுதுகிறார். "அப்பன் வெட்டிய கிணறு என்பதால் உப்பு நீரை குடிக்க முடியுமா" என்றும் அவர் கேட்கிறார் என்று கூறினேன்.

சிறப்புரையாற்றிய எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் இதனை குறிப்பிட்டு

"எங்கள் அப்பன் வெட்டிய கிணற்றின் உப்பு நீரைக் கூட குடிக்க விடாமல் தடுத்ததும்  இப்போதும் மறுக்க நினைப்பதும் யார் என்பதும் மாலனுக்கு தெரியாதா?"

என்று வினவினார்.

என்ன மாலன் கேள்வி புரிந்ததா? இதற்கு பதிலுண்டா உம்மிடம்? 

No comments:

Post a Comment