Sunday, December 13, 2020

அந்த C.B.I யே திருடினா?

 


முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரு நிறுவனத்தை சீல் வைத்து அதன் கைவசமிருந்த  400 கிலோ தங்கத்தை லாக்கரில் வைத்து பூட்டி பாதுகாத்து ஜாக்கிரதையாக வைத்துள்ளது சி.பி.ஐ.

அந்த நிறுவனம் வாங்கிய கடனுக்காக அந்த தங்கத்தை கேட்டது எஸ்.பி,ஐ. சி.பி.ஐ மறுத்தது. நீதிமன்றத்திற்கு பிரச்சினை போக பல வருடங்களுக்குப் பிறகு தங்கத்தை ஸ்டேட் வங்கி எடுத்துக் கொள்ள தீர்ப்பு வந்தது.

72 சாவிகள் கொண்டு பூட்டப்பட்ட லாக்கரை திறந்து பார்த்தால் 300 கிலோ தங்கம் மட்டுமே இருந்துள்ளது. எடை மெஷினில் தவறு இருந்திருக்கலாம் என்பதே சி.பி.ஐ வாதம்.

ஊரெங்கும் நடக்கும் ஊழலை விசாரிக்கும் சி.பி.ஐ யே செய்த திருட்டை விசாரிக்க சி.பி சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். எங்களை இன்னொருவர் விசாரிப்பதா என்ற சி.பி.ஐ க்கு உங்களுக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது என்று கேட்டுள்ளார் நீதிபதி.

சி.பி.ஐ இந்த அளவிற்கு சீரழிந்ததற்கு யார் காரணம்?

நாகேஸ்வரராவ் மாதிரியான பொறுக்கிகள் எல்லாம் தலைவராக இருந்தால் சி.பி.ஐ வேறெப்படி இருக்கும்!

பிகு: இந்த திருட்டு வேலை நடந்தது சென்னையில். தமிழகத்திற்கு எப்பேற்பட்ட பெருமை!

No comments:

Post a Comment