Wednesday, December 2, 2020

நீங்களும் இணைய . . .

 விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை நீங்களும் ஆதரிக்கிறெர்கள் என்றால் பின்வரும் வாசகங்களை உங்கள் பெயரோடு கீழேஉள்ள படத்தோடு உங்கள் வலைப்பக்கத்திலும் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளவும்.


எஸ்.ராமன்
 ஆகிய நான்...

பிறந்தது முதற்கொண்டு இந்த நிமிடம் வாழ்வது வரையிலும் எனது உயிர் நிலைத்திருப்பதற்கு முகம் தெரியாத எத்தனை எத்தனை விவசாயிகளோ பிச்சையிட்டிருக்கிறார்கள்.
எனது உடலின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் அந்த முகம் தெரியாத உழுகுடிகளின் வியர்வை கலந்து ஓடுகிறது.
காடு திருத்தி நிலமாக்கி உழுது பயிரிட்டு நம் புள்ளை குட்டிகளின் வயிறு நிறைத்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் கொட்டும் பனியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் உறுதிப்பாடு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உடனிருந்து போராட்ட முனையில் பங்கேற்க முடியாவிட்டாலும் இருந்த இடத்திலிருந்தே அவர்களின் கோரிக்கைக்கு என் ஆதரவை தெரிவிக்கிறேன். அவர்களின் போர்கரங்களுடன் எனது கரங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.
எஸ்.ராமன் ஆகிய நான் விவசாயிகளின் பக்கம் நிற்கிறேன். நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள்...

No comments:

Post a Comment