Thursday, December 10, 2020

ஓவரா ஆடாதீங்கடா

 


அயோக்கியர்களிடம் ஆட்சியதிகாரம் வந்தால் என்ன ஆகும் என்பதற்கு "பீமா கொரேகான்" வழக்கு ஒரு உதாரணம்.

பல்வேறு செயற்பாட்டாளர்களை சிறையிலடைத்து மகிழ்ச்சியடையும் இந்த கொடூரர்கள், சிறையில் வாடுபவர்களை சின்ன சின்ன விஷயங்களில் கூட வாட்டி வதைத்து திருப்தியடைகிறது.

கை நடுக்கம் உள்ள ஸ்டான் ஸ்வாமி, தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா வைத்த சிப்பர் கொடுக்கக் கூட அனுமதி மறுத்த அயோக்கியர்கள், கைது செய்யப் பட்ட இன்னொரு செயற்பாட்டாளரான கௌதம் நவ்லாகாவின் மூக்குக் கண்ணாடியை களவாடி விட்டார்கள். 

பார்வைக்குறைபாடு உள்ள அவருக்கு இன்னொரு கண்ணாடியை அவரது குடும்பத்தினர் அனுப்பி வைக்க அதனை திருப்பி அனுப்பி விட்டார்கள். இந்த அல்பத்தனத்தை செய்து மொட்டை சாமியார் அரசு.

ஆட்சி கையில் உள்ளது என்று ஓவராக ஆடாதீர்கள். உங்களை நிச்சயம் மக்கள் தோற்கடிப்பார்கள். அதே சிறைச்சாலைக்கு உங்கள் கூட்டமும் ஒரு நாள் வரும். அப்போது உங்களுக்கு கோமியம் கூட கிடைக்காத நிலை வரலாம் என்பதை மறவாதீர்கள்

No comments:

Post a Comment