Wednesday, December 30, 2020

புரோக்கர்களுக்கு அழிவில்லை. அவருக்கும் . . .

 


நம்ம தரகுப்புயல் அய்யா, அரசியலிலிருந்து விலகுவதாக உணர்ச்சிக் கொந்தளிப்போடு அறிக்கை விட்டுள்ளார். 


அவரது புலம்பலை படிக்கையில் எனக்கு சிரிப்பு சிரிப்பாகவே வந்தது.

கூழாங்கல்லை இவர்தான் மாணிக்கம் என்று பில்ட் அப் கொடுத்தார். மன நோயாளி போல ரஜினி வருவார், வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்ததும் இவர்தான். காமராஜர் காலடியில் இருந்தவர் என்று சொல்கிற இவர்தான் காமராஜர் வீட்டை எரித்து அவரை கொல்ல முயன்ற கூட்டம் ஆட்சிக்கு வர 2014 மக்களவைத் தேர்தலில் தரகு வேலை பார்த்தவர். காந்தியின் பெயரில் இயக்கம் வைத்துக் கொண்டே காந்தியைக் கொன்றவர்களோடு கரம் கோர்த்தார். இப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அந்த கூட்டம் கொடுத்ததுதானே!

இப்படியெல்லாம் எழுதி விட்டதால் இவர் மீண்டும் அரசியல் பக்கமே வர மாட்டார் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

"திரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று சொன்ன நாய் சேகர் போல இவரும் எண்ட் கார்டே இல்லாமல் மறுபடி அரசியலுக்கு வருவார், வேறு ஒருவருக்கு தரகு செய்ய . . .

புரோக்கர்கள் என்றும் அழிவதில்லை. 

2 comments:

  1. "மன நோயாளி போல ரஜினி வருவார், வருவார்", pola Enna, rajini unmayaalumae Mana noyaalithaan.
    Kamarajar'aa Kolla try pannathu yaaru?

    ReplyDelete
    Replies
    1. ஆர்.எஸ்.எஸ் டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டை எரித்தது. அவரை கொல்லவும் முயற்சித்தது.

      Delete