Saturday, December 26, 2020

எப்போதும் அவர் எங்களோடு

 


எங்கள் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் மறைந்து மூன்றாண்டுகள் உருண்டு விட்டன. அவர் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் ஒரு அகில இந்திய மாநாடு கூட முடிந்து விட்டது. 

ஆனாலும் அவர் எப்போதும் எங்களோடே இருப்பதாக உணர்கிறோம். அவரது உரைகளும் எழுத்துக்களும் எப்போதும் எங்களை வழி நடத்தும், உற்சாகமூட்டும். 

எல்லாவற்றையும் விட அவரது மகத்தான சாதனையான "பென்ஷன்" ஓய்வு பெற்றவர்களுக்கும் இனி ஓய்வு பெறப் போகிற எங்களைப் போன்றவர்களுக்கும் அவரின் அருகாமையை எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கும்.

செவ்வணக்கம் தோழர் என்.எம்.எஸ்

இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்தை சுட்டிக்காட்டும் உரையின் காணொளி கீழே உள்ளது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுதான் அவர் இறுதியாக பங்கேற்ற அகில இந்திய மாநாடு. அதில் அவர் ஆற்றிய உரைதான். அவசியம் பாருங்கள்




பிகு : மேலே உள்ள படம், தோழர் என்.எம்.எஸ், எங்கள் வேலூர் கோட்ட நிகழ்வில் இறுதியாக கலந்து கொண்ட வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழாவின் போது எடுக்கப்பட்டது.

முகப்பில் உள்ள படமும் வேலூரில் எடுக்கப்பட்டது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 24 வது பொது மாநாடு 1996 ல் வேலூரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment