Tuesday, December 15, 2020

கூடாவிட்டால் குடி முழுகாது

 


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கப் போவதில்லை என்று மோடி அரசு முடிவெடுத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் அவையில் எதிரொலிக்கக் கூடாது என்ற அச்சம் இம்முடிவின் பின்னணியில் உள்ளது. ஜனநாயகத்தை முடக்கும் இன்னொரு நடவடிக்கை இது.

இருந்தாலும் இக்கூட்டத் தொடர் நடக்காதது நல்லது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால்

கடந்த தொடரில் இந்த அரசு

தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புக்களாக மாற்றியது.

மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.

மாநிலங்களில் வாக்கெடுப்பு நடத்தவில்லை.

இந்த அரசு இது வரை மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. தன்னுடைய மிருக பலம் கொண்டு மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்ற மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது. விவாதத்திற்கோ நிலைக்குழு பரிசீலனைகளுக்கோ வாய்ப்பில்லாமல் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தாக்குதல்கள் அடுத்த பட்ஜெட் தொடர் வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.

கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் ஒன்றும் குடி முழுகிப் போகப் போவதில்லை. அடுத்த தொடர் வரை மக்கள் உயிர் வாழ்வது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றம் கூடினாலும் ஜனநாயத்தை படுகொலை செய்பவர்கள் இப்போது கூடாமல் செய்துள்ளார்கள். 

No comments:

Post a Comment