Wednesday, December 30, 2020

பதுங்கு குழியில் பத்திரமாக மாலன்

 


யாராவது மூத்த பத்திரிக்கையாளர் மாலனை பார்த்தீங்களா?

24.12.2020 க்குப் பிறகு அவருடைய முக நூல் பக்கமும் ட்விட்டர் பக்கமும் எந்த புதிய பதிவும் இல்லாமல் இருக்கிறது. 

"தினம் ஒரு கேள்வி" என்று அவர் ஆரவாரமாக ஆரம்பித்தது கூட 24.12.2020 அன்றோடு நின்று போய் விட்டது.

அவரை உசுப்பேத்த தினம் ஒரு பின்னூட்டம் போட்டாலும் மனுஷன் அசையவே இல்லை.

நேற்று போட்ட கமெண்டின் ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது.



சாலமன் பாப்பையா "வாங்க பழகலாம்" என்று கூப்பிட்டது போல "வாங்க மாற்றலாம்" என்று வரவேற்றவர் ஒரு வேளை மேலே உள்ள பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டிருக்கிறாரோ?

அடுத்தவர் பதிவுகளுக்கெல்லாம் சென்று பின்னூட்டம் போடும் ஒரு மூத்த்த்த்த்த்த பத்திரிக்கையாளரை இப்படி முடக்கி வைத்த பாவம் ரஜினியையே சாரும்.

பிகு: அவரது ட்விட்டர் பக்கத்திலேயே ஒரு சங்கியோடு நடந்த சண்டை நாளை.

No comments:

Post a Comment