Monday, December 14, 2020

கலவரத்தை தூண்ட காவிகள் சதியா?

 


சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது செய்தீர் . . .

தூத்துக்குடியில் ஸ்டெரிலைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போதும் இதையே செய்தீர்.

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் இப்படியே செய்தீர்.

இப்போது மீண்டும் விவசாயிகள் போராட்டத்தின் போதும் மாவோயிஸ்டுகள் ஊடுறுவல் என்று சொல்லி கலவரத்திற்கு வித்திடுகிறார்கள் காவிகள். 

அவர்களுக்கு ஒரு வார்த்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

அங்கே களத்தில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீக்கியர்கள்.

ஹர்பஜன்சிங் என்ற கிரிக்கெட் வீரர் ஒரு வாய்த்தகராறின் போது கன்னத்தில் ஒரு அறை கொடுத்ததிலேயே எதிர் பார்ட்டி சுருண்டு விழுந்து இறந்து போனார்.

அதுவாவது வெறும் ட்ராபிக்கில் ஒருவர் இன்னொருவரை முந்தியதால் வந்த சாதாரண பிரச்சினை.

இப்போது அவர்கள் களத்தில் நிற்பது வாழ்வாதாரப் பிரச்சினைக்காக.

எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது காவிகளுக்கு நல்லது. உங்கள் சதிகள் இங்கே அரங்கேறாது. இழப்பு உங்கள் பக்கத்திற்குத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment