Tuesday, December 29, 2020

இருபது லட்சம் அளித்தோருக்கு நன்றிகள்

 


நேற்று இரவு கணிணியை அணைக்கும் முன்பாகத்தான் பார்த்தேன். வலைப்பக்கத்தின் பார்வை எண்ணிக்கை "இருபது லட்சம்" என்ற மாய எண்ணிக்கையை கடந்திருந்தது.



2009 ம் வருடம் எழுதத்தொடங்கி இரண்டே பதிவுகளில் மூடி வைத்த வலைப்பக்கம், அடுத்த ஆண்டு விபத்து ஏற்பட்டு ஒரு மாத காலம் வீட்டில் முடங்கிய நேரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

நம் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதற்கான தளம் என்பதால் அதன் மீதான ஈர்ப்பு இன்னும் நீடிக்கிறது.

"கடை விரித்தேன், கொள்வாரில்லை" என்ற நிலை வந்திருந்தால் எத்தனையோ வலைப்பக்கங்களைப் போல இந்த பக்கமும் நின்று போயிருக்கும். அப்படியில்லாமல் தொடர்ச்சியாக வலைப்பக்கத்திற்கு வருபவர்களால்தான் வலைப்பக்கம் உயிர்ப்போடு தொடர்கிறது.

முதல் பத்து லட்சம் பார்வைகள் வர எட்டு ஆண்டுகள் ஆனது. அடுத்த பத்து லட்சம் மூன்றரை ஆண்டுகளில், அதுவும் "தமிழ்மணம்" திரட்டி இல்லாத போதும் வந்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.

இருபது லட்சம் பார்வைகளை அளித்து உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பயணம் தொடரும் இன்னும் உற்சாகமாக ....

5 comments: