Saturday, December 26, 2020

இன்று நாம். நாளை அவர்களும்

 





திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த செய்தி சிலருக்கு வயிற்றெரிச்சலையும் உருவாக்கியுள்ளது. 21 வயது பெண்தான் மேயர் என்றால் வேறு யாருக்கும் தகுதியில்லையா என்பது போன்ற அபத்தமான விமர்சனங்களை பார்க்க முடிகிறது. வயதானால்தான் முதிர்ச்சி வரும் என்று சொல்லும் அதே வாய் ஒரு எழுபது வயதுக்காரருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தால் எப்படி பேசும் என்றும் நமக்கு தெரியும்.

இன்று பொறாமையில் பேசும் வாய்கள் கூட நாளை அவரது பணிகளைப் பாராட்டிப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஏனென்றால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்வு. அத்தேர்வுகள் என்றுமே சோடை போனதில்லை.

No comments:

Post a Comment