Wednesday, March 31, 2021

ராகுல் சோனியா தாமரைக்கு வாக்கு கேட்பார்களா?

 


ஆம். 

இப்படி நடந்தாலும் நடக்கும்.

கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்


ப.சிதம்பரத்தின் மருமகளும் சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் பரத நாட்டிய அபினயத்தை பயன்படுத்தி தாமரைக்கு ஓட்டு கேட்டுள்ளார்கள்.

இது அபத்தம் எனவும் அவருக்கு தெரியாமல் அவரது படத்தை பயன்படுத்தியது தவறு என்றும் கண்டனக்குரல் எழுந்ததும் சத்தமில்லாமல் அதை நீக்கி விட்டார்கள் போட்டோஷாப் பொய்யர்கள்.

மன்னிப்போ, வருத்தமோ கூட கேட்கவில்லை சங்கிகள். அதில் வியப்பில்லை. பாஜக ஆட்களுக்கு என்றைக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணையெல்லாம் இருந்திருக்கிறது!

இன்னும் ஒரு சுவாரஸ்யமான செய்தி: அவர்கள் பயன்படுத்திய அந்த காட்சியே கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆட்.ரஹ்மான் இசையில் கலைஞர் எழுதிய "செம்மொழியான தமிழ் மொழியே" பாடலில் வரும் ஒரு காட்சி.

இவர்களுக்கு

தமிழ் பிடிக்காது, கலைஞர் பிடிக்காது, ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்காது. ஆனாலும் ஆதாயத்திற்காக எதையும் செய்யும் ஆபத்தான கூட்டம் இது. 

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. ஒருமையான வார்த்தைகளை தவிர்க்கவும்

    ReplyDelete