Saturday, March 27, 2021

பிரதமர்யா! சிரிக்காதீங்கய்யா!

 


வங்க தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றேன் என்று மோடி சொன்னதற்கு இப்படி 1200 பேர் சிரித்து வைத்துள்ளீர்களே, இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை. 

ஒரு பிரதமரை இப்படி காமெடியனாக கருதுறாங்களே!

சரி, கொஞ்சம் சீரியசாகவும் பேசலாமா?

வங்க தேச விடுதலைப் போரில் இந்திய ராணுவமும் விமானப் படையும் தீவிரமாக தங்கள் உயிரை பணயம் வைத்து போர் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் 

பாஜகவின் முன்னாள் வேஷமான ஜன சங்கம் டெல்லியில் ஒரு நாள் போராட்டம் ஒன்றை நடத்தியது. ஆர்.எஸ்.எஸ் காவிகளை ராணுவத்தில் இணைத்து எல்லைக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான தர்ணா அது. 

காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை ஆன அந்த நிகழ்வு அது.

அதில் மோடி கலந்து கொண்டாரா இல்லையா என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது.

ஆனால் அந்த நிகழ்வுக்காக ஏதோ பெரும் தியாகம் செய்ததாக மோடி பில்டப் கொடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இதற்காக சிரிப்பதோடு நிறுத்திக் கொண்டதற்காக மோடி மோகிகள் மகிழ்ச்சியடைய வேண்டும்.


No comments:

Post a Comment