Tuesday, March 2, 2021

எடப்பாடி ஊழல் தோஷம் எப்படிப் போச்சு மருத்துவரய்யா?

 




“இது நம்ம ஆளு” படத்தில் ஒரு காட்சி வரும். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு ஊமைப் பெண்ணை வீடு புகுந்து திருடினார் என்று கட்டிப் போட்டு பஞ்சாயத்தில் நிறுத்தி வைத்திருப்பார்கள். பாக்யராஜ் அந்த பெண்ணின் கட்டை அவிழ்த்து விட்ட பிறகுதான், அந்தப் பெண் திருட வீட்டிற்குப் போகவில்லை என்றும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே போன சூழலில் கதறிய குழந்தையின் அழுகுரல் கேட்டு தாங்காமல் பால் கொடுக்க சென்றார் என்பது தெரிய வரும். ஒடுக்கப்பட்ட இனைத்தைச் சேர்ந்தவர் தன் குழந்தைக்கு பால் கொடுத்தது தெரிந்தால் அவமானம் வந்து விடும் என திருட வந்தார் என்று கதை கட்டியிருப்பார்கள்.

 உண்மை தெரிந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டாலும் அந்த பெண் பால் கொடுத்ததால் ஏற்பட்ட தோஷத்தை போக்க ஏதாவது செய்யுங்கள் என்று அந்த அக்ரஹாரத் தலைவர் சோமயாஜூலுவிடம் கேட்க, அவரும் சொம்பில் இருந்த கங்கை நீரை மந்திரம் சொல்லி தெளித்து தோஷத்தை போக்குவார். அதே போல என் தோஷத்தையும் போக்குங்கள் என்று ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட ஷோபனாவும் கேட்டு தோஷ நிவாரணத்தின் அபத்தத்தை வெளிப்படுத்துவார் என்பது வேறு விஷயம்.

 இந்த காட்சி ஏன் நினைவுக்கு வந்தது?

 எடப்பாடி ஒரு ஊழல் பேர்வழி என்று மருத்துவரய்யா போட்ட ட்வீட்டுகளை ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பகிர்ந்து கொண்ட போது நினைவுக்கு வந்தது.

 


எடப்பாடி அரசின் மீது பன்வாரிலால் புரோஹித்திடம் ஊழல் புகார் பட்டியல் அளித்த  சின்ன மருத்துவரய்யாவின் புகைப்படம் நினைவு படுத்தியது.

 


மருத்துவரய்யாக்கள் எந்த சொம்பில் எந்த புனித நீர் கொண்டு எடப்பாடியின் ஊழல் தோஷத்தை போக்கி 23 சீட்டுக்களை பெற்றிருப்பார்கள்?

அந்த சொம்பில் கங்கை நீருக்கு பதிலாக பல கோடிகள் இருந்திருக்கும். சொம்பு கூட மருத்துவரய்யாக்கள் கையில் இருப்பதற்குப் பதிலாக எடப்பாடி கையில் இருந்திருக்கும்.  டாக்டரய்யாக்கள் மீது அவர் தெளித்த கங்கை நீராகிப் போன கரென்ஸி நோட்டுக்களே அவரது ஊழல் தோஷத்தைப் போக்கியிருக்கும்!

 என்ன சரிதானே டாக்டரய்யாக்களே?

 

No comments:

Post a Comment