Monday, March 29, 2021

அருகதை கிடையாது வானதி மேடம்

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நான் சொல்ல வருவதும் அதைத்தான்.

வானதி சீனிவாசன் மட்டுமல்ல, பாஜகவில் உள்ள யாருக்குமே யாரையும் குறை சொல்ல அருகதை கிடையாது. 

காஷ்மீரில் கொல்லப்பட்ட ஆசிபா முதல் உத்தரப் பிரதேச பாலியல் கொலைகள் வரை குற்றவாளிகள் பாஜகவினரே. அந்த குற்றவாளிகளை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பாதுகாக்கும் பொறுக்கிக் கட்சியும் அதுதான். 



ராதாரவியை தனக்கு பிரச்சாரத்தில் பேசவைத்துவிட்டு, ஆ.ராசாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதற்கெல்லாம் வெட்கப்படனும் வானதி!

இந்த ராதாரவி, நடிகை நயன்தாராவை விமர்சித்தற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு முன்பாக பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என நீங்களெல்லாம் குதித்தீர்கள். நீக்கிய பின்னர், ராதாரவியை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்.

ஆ.ராசா பேசியதற்கு அந்த கட்சியின் தலைவரும் கண்டித்துள்ளார். மகளிர் அணி செயலாளரரும் கண்டித்திருக்கிறார்.இணையத்தில் எதிர்கட்சி பெண் தலைவர்களை இழிவாக பேசிய உங்கள் கட்சியினரை இதுவரை கண்டித்திருக்கிறீர்களா?

கனிமொழியை கள்ளக்குழந்தை என்றானே உங்கள் கட்சியின் காரைக்குடி வேட்பாளர், எச்.ராஜா, எங்கே கண்டித்தீர்கள்? நீங்களும் தமிழிசையும் ஒரு நாள் கூட கண்டித்ததில்லை.

உங்கள் கட்சியின் மதன் ரவிச்சந்திரன், மாரிதாஸ் ஆகியோர் தோழர் சுந்தரவள்ளியை ஆபாசமாக பேசினார்களே அப்போது எங்கே சென்றீர்கள்?

அதற்கெல்லாம் இது சமம் என்பது என் வாதமல்ல. ஆனால், இதை விமர்சிக்க ஒரு சதவீதம் கூட உங்களுக்கு உரிமையே இல்லை.ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்கள் விரோத, மனித குல விரோத அமைப்பினை தங்கள் தாயாக நீங்கள் அறிவித்துள்ளீர்கள்.

உங்களுக்கு அருகதை இல்லை.





No comments:

Post a Comment