Saturday, December 1, 2018

கருணை வடிவம் நீட் அம்மையார்; சீ சீ


கேரள மாநில பெரு வெள்ளத்திற்கு கேட்ட நிதி ஒன்று, மத்தியரசு அள்ளிக் கொடுத்ததோ அற்பத் தொகை. அதிலும் அரிசிக்கான தொகையை பிடித்துக் கொண்டது.

சவுதி அளிக்க இருந்த தொகையை வெட்டிக் காரணங்கள் சொல்லி தடுத்து விட்டது.

வெளி நாடுகளில் வாழும் மலையாளிகளை சந்தித்து நிதி திரட்ட அமைச்சர்கள் புறப்பட்ட போது அதையும் தடுத்து விட்டது.

இப்போது வெள்ள நிவாரணப் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டதற்காக

கருணை வடிவமான நீட் நிர்மலா அம்மையார் இருபத்து எட்டு கோடி ரூபாய்க்கு பில் அனுப்பியுள்ளார்.

சீசீ ரவிசங்கர் சாமியார் யமுனையை சீரழித்து கலை நிகழ்ச்சி நடத்திய போது ராணுவத்தை கூலிப்படையாக மாற்றிய இந்த அம்மையார் உயிர் காக்கும் பணிக்கு காசு கேட்கிறார்.

ஷேக்ஸ்பியரில் வரும் ஷைலாக் இவர்களை விட கருணை கொண்டவனாகத் தெரிகிறான்.

வார்ட் தேர்தலில் இந்த அராஜகப் பேர்வழிகளுக்கு பனிரெண்டு வாக்குகளே அதிகம் . . .. 

1 comment:

  1. ஓபிஎஸ்ஸோட குடிகாரத் தம்பியை சிறப்பு விமானத்துல ஓசியில்தான் முதலில் கூட்டிச்சென்றார்கள். பிரச்சினை வந்ததும் காசு வாங்கினாங்க

    ReplyDelete