Wednesday, December 12, 2018

இருவரின் வெற்றி மகத்தானது . . .





நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியும் நிறைவும் அளித்தது ராஜஸ்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற இரண்டு வெற்றிகள்.

பத்ரா தொகுதியில் தோழர் பல்வான் புனியா மற்றும் துங்கர்கார்க் தொகுதியில் தோழர் கிரிதர் லால் மஹியா ஆகிய இரண்டு தோழர்கள் வெற்றி பெற்று ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு செல்லவுள்ளார்கள்.

மார்க்சிஸ்டுகளுக்கு முடிவுரை எழுதுவோம் என்று பிதற்றிய சில காவிக் கயவர்களுக்கு இந்தி பேசும் மாநிலத்தில் செங்கொடி உயரப் பறக்கும் என்பது நிரூபணமாகி உள்ளது.

தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் ஐந்து தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதற்கு அம்மாநில மக்கள் அளித்த அங்கீகாரம் இந்த வெற்றி.

வாழ்த்துக்கள் தோழர்களே,
உங்கள் பணி சிறக்கட்டும். 
மேலும் பல வெற்றிகளை குவிக்க உங்கள் பணி அடித்தளமாய் அமையட்டும். 

3 comments:

  1. got alms after repeatedly begging italy mafia and shamelessly aligned with corrupt crooks. pitchaikaaran kevalam.

    ReplyDelete
  2. ??தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி// - பிதற்றுவதற்கு முன்பு ஒழுங்கா படிடா நாயே

    ReplyDelete
  3. People welfare oriented programs n works on it gives them this reward.let their fame go high as an assembly member..red salute comrades

    ReplyDelete