Saturday, December 22, 2018

ஜட்ஜய்யாவும் மனுசன்தான்யா !!!



உத்தர்கண்டில பாஜக குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வந்தது சட்ட விரோதம்னு சொன்னாரு ஒரு நீதிபதி.

அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க தடை போட்டாங்க! வேறு வழியில்லாம நீதிபதியாக்கினாலும் சீனியாரிட்டியை கெடுத்து தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை கெடுத்துட்டாங்க!

"அவரு ரொம்ப உத்தமரு"  ன்னு சொன்ன ஒத்தரு இப்போ "ஹிஸ் எக்ஸலென்ஸி"  ஆயிட்டாரு.

நூறு கோடி ரூபாய் வேண்டாம்னு சொன்ன ஒத்தரு மர்மமா செத்துப் போயிட்டாரு. 

அந்த மர்மம் எனும் கருமத்தை எல்லாம் எதுக்கய்யா விசாரிக்கனும்னு சொன்னவரு ஆவலோடு காத்துக்கிட்டு இருக்காரு, 

எதுக்கு?

நடக்கற போது உங்களுக்கே தெரியும்!

இந்த மாசக்கடைசியில ரிடையர் ஆகப் போறவரும் மனுசன்தானே! லோயா கதியைப் பார்த்தவருதானே! 

பாவம்யா அவரை குறை சொல்லாதீங்க!

போலி எண்கவுன்டரில் செத்தவங்க, அவங்களே தற்கொலை செய்துகிட்டு செத்துப் போகலைன்னு சொல்லாதவரைக்கும் சந்தோஷப்படுங்க

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete