Wednesday, December 26, 2018

புல்லட் ட்ரெயினும் வேணாம் ...



கடந்த 22 ம் தேதி சரயு-யமுனா ரயிலில் பயணம் செய்த பாஜகவின் தலைவரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான லட்சுமிகாந்த் சௌலா கோபத்தில் வெடித்துத் தள்ளியுள்ளார்.

அவர் பயணித்த ரயில் பத்து மணி நேர தாமதத்தில் செல்ல, உணவும் நீரும் இல்லாமல் பயணிகள் பட்ட அவஸ்தையைப் பார்த்த அவர் ஒரு வீடியோ மூலமாக

"புல்லட் ட்ரெயினோ ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் தேவை இல்லை. இருக்கும் ட்ரெயினை உருப்படியாக ஓட்டை உடைசல் இல்லாமல் ஓட்டுங்கள். நடைபாதைகளில் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் பயணிகள் மீது அக்கறை செலுத்துங்கள்"

என்று மோடியிடமும் ரயில்வே மந்திரி பியூஷ் கோயலையும் சூடாக கேட்டுள்ளார்.

செய்தி மற்றும் காணொளி இணைப்பு இங்கே உள்ளது

பாஜக ஆட்களே மோடியை திட்டத் தொடங்குவது அவரை அக்கட்சி ஆட்களே எதிர்க்கத் தொடங்கி விட்டனர் என்பதன் அடையாளம். 

No comments:

Post a Comment