Thursday, December 27, 2018

மரமேறி – தமிழிசை, பொன்னார் கவனத்திற்கு




தென்ன மரம் ஏறுகிறவனை எல்லாம் மேலே உட்கார வைக்கறதுக்கு முன்னாடி யோசிக்கனும்

என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மலையாளப் பத்திரிக்கை “ஜன்ம பூமி”

கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழரான தோழர் பிணராயி விஜயனை இழிவுபடுத்தி வெளியிட்டுள்ள கார்ட்டூன் இது.



காவிகள் இவ்வாறு ஜாதிய ரீதியாக தோழர் விஜயனை இழிவுபடுத்துவது இது முதல் முறை அல்ல.

“தாழ்ந்த ஜாதி மகனே” என்று ஒரு மாதம் முன்பாக சமூக வலைத் தளங்களில் ஒரு அசிங்கமான பிரச்சாரத்தை காவிக்கயவர்கள் மேற்கொண்டதையும் “அவர் எங்கள் தோழர்” என்று செங்கொடி இயக்கத்தினர் பதிலடி கொடுத்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஆர்.எஸ்.எஸ் அதன் பத்திரிக்கையிலேயே அதிகாரபூர்வமாக  கார்ட்டூன் வெளியிடுகிறது.  அதன் சிந்தனை எவ்வாறு ஜாதிய வெறியில் அழுகிப் போயுள்ளது என்பதற்கான நிரூபணம் இது.

கீழே உள்ள வாசகங்களை எழுத மனம் சங்கடமாகத்தான் உள்ளது. ஆனாலும் வேறு வழியில்லை. அவர்களுக்கும் தங்கள் குருபீடத்தைப் பற்றி புரிய வேண்டுமல்லவா?

மரியாதைக்குரிய தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன்னார் அவர்களுக்கு,

நீங்கள் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவோ அல்லது மத்திய இணை அமைச்சராகவோ இருக்கலாம்.

ஆனாலும் உங்கள் கட்சியின் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் உங்களையும் ஜாதியக் கண்ணாடி கொண்டு உங்களையும் மரமேறிகளாக மட்டுமே பார்க்கும். நீங்கள் என்னத்தான் தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை வரளக் கத்தினாலும் உங்களை உயர்ந்த இடம் எதிலும் உட்கார வைக்காது. உங்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் மரமேறிகளாக இருந்தார்கள் என்பதால் தோழர் பிணராயி விஜயனை எப்படி இழிவு படுத்துகிறார்களோ அது போல உங்களையும் நிச்சயம் இழிவு படுத்துவார்கள்.  மனு தர்மத்தையே தன் கொள்கையாகக் கொண்ட உங்கள் அமைப்பு பற்றி என்னை விட உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

ஏற்கனவே எஸ்வி.சேகர் தொடங்கி காயத்ரி ரகுராம் வரை உங்களை இழிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே கவனமாக இருக்கவும், பாஜக விற்கு வெளியே சென்று . . .

2 comments:

  1. இதையெல்லாம் தமிழிசை மற்றும் பொன்னார் மனங்களில் பதியுமாறு சொல்வார் இல்லை.

    ReplyDelete
  2. காட்டுவாசி , கருங்குரங்கு தமிழைசைக்கு உங்க புத்திமதி புரியாது

    ReplyDelete