Monday, December 10, 2018

மோடி பேச்சும் காக்கா கறியும் . . .



"இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்புச் சான்றிதழ் வழங்குகிறது. இறப்புச் சான்றிதழும் தருகிறது. அவர்களுக்கு விதவை பென்ஷனும் தருகிறது.  போலி அக்கவுண்டுகள் மூலமாக தரப்படும் விதவைப் பென்ஷன் தொகையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் எந்த விதவைக்கு  செல்கிறது?"


இதுதான் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியது.

விதவைப் பென்ஷன் திட்டத்தில் ஊழல் நடந்திருந்தால் அந்த ஊழலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதைச் செய்தவர் சோனியா காந்தி என்றால் அவரை கைது செய்து வழக்கு போடட்டும்.

அதை விடுத்து இந்தியாவில் பிறக்காதவர், காங்கிரஸ் கட்சியின் விதவை என்றெல்லாம் பேசுவது படு மட்டமாக உள்ளது.

சோனியாவை இழிவு படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தமாக விதவைகளையே நையாண்டி செய்வதாக அவரது உடல் மொழி அமைந்துள்ளது. நாடாளுமன்ற விவாதத்திலேயே அவரது உடல் மொழி எவ்வளவு அசிங்கமாக, தரம் கெட்டுப் போயிருந்தது என்பதை நாம் பார்த்தோம்.

இப்போது இன்னும் கேவலமாக கீழிறங்கியுள்ளார்.

நாலாந்தர, ஐந்தாம்தர பேச்சாளர்களை விட நரகல் நடையில் பேசும் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் என்பது எவ்வளவு வெட்கக் கேடானது?

இவரது பேச்சை இவர் கட்சிக்காரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கிறார்கள்.

தலைவனே படு கேவலம் என்கிற போது தொண்டர்கள் மட்டும் என்ன உத்தமர்களாகவா இருக்கப் போகிறார்கள்!

காக்கா கறி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்!!!

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. நீ செய்த துரோகமும் பொம்பளைப் பொறுக்கித்தனமும் உன் மனைவிக்குத் தெரிந்து உன்னை உதறி விட்டுப் போனார்களே, இன்னும் நீ திருந்தவில்லையே

    ReplyDelete