Wednesday, July 21, 2021

கண்ணம்மா, கனவில்லையா?

 


சில நாட்களுக்கு முன்பாக சேனல்களை மாற்றுகையில் விஜய் டிவி சூப்ப்ர் நிகழ்ச்சியில் ஒரு பாடலை முதல் முறையாகக் கேட்டேன். எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடலை அதற்கு பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்டிருப்பேன். ஒரு முக்கியமான தமிழாக்கப்பணியை செய்து கொண்டிருந்த போது எஸ்.பி.பி யின் குரலும் மெல்லிசை மன்னரின் இசையும் காதுகளைத் தாண்டி உள்ளத்தையும் வருடிக் கொண்டிருந்தது. பணியின் கடுமை தந்த சோர்வையும் போக்கியது.



விஸ்வதுளசி என்ற இப்படத்தின் பாடல்களை மெல்லிசை மன்னர் உருவாக்க பின்னணி இசையோ இளையராஜாவின் கை வண்ணத்தில் என்பதை கூகிளார் சொல்ல, டைட்டில் இசையை யூட்யூபார் அளித்தார். அதுவும் உங்கள் நெஞ்சை வருடிச் செல்லும்.



 

No comments:

Post a Comment