Wednesday, July 28, 2021

ஜாதிச் சாக்கடையில் புரளும் ஜெமோ

 


கீழே உள்ளது புளிச்ச மாவு ஆஜானின் இணையப் பக்கத்தில் .பாரி என்ற பெயரில் பதிவாகியுள்ள ஒரு செல்ஃபி கேள்வி. மொட்டைக்கடிதாசி போல தானே கேள்வி எழுதும் கேவலமான பழக்கத்தை ஜெமோ என்று கைவிடப் போகிறாரோ?

-------------------------------------------------------------------------------------

ஆனால் அவர்களை இன்று இடைநிலைச் சாதியைச் சேர்ந்த குஞ்சுகுளுவான்களெல்லாம் அலட்சியமாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களின் தகுதியை மட்டம் தட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்வது இல்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அந்த தெனாவெட்டு இருக்கிறது. நம்பித்தான் செய்கிறார்கள்.

 

அந்த தோரணையுடன் பேசுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட  புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டுடியோ அருண் போன்றவர்கள் அவர்களெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுசெய்திருக்கிறார்கள்? என்ன வாசித்திருக்கிறார்கள்? வெறும் முகநூல்வம்பாளர்கள். பழங்காலத்தில் ஐம்பது வயதான தலித் முதியவரை பத்துவயதான ஊர்க்காரப் பையன் அடா புடா என அழைப்பான். அதே மனநிலைதான் இது.

 இந்த கூட்டம் மறந்தும் இந்த தலித் ஆய்வாளர்களின் நூல்களை குறிப்பிடுவதில்லை. அவற்றைப்பற்றி ஒருவரி எழுதுவதில்லை. அவர்கள் ஆய்வுசெய்கிறார்கள் என்பதையே மறைத்துவிடுவார்கள். தங்கள் பட்டியல்களில் அந்தப்பெயர்களை மறைத்து தொ.பரமசிவம் போன்ற தங்களுக்கு வேண்டியவர்களையே முன்வைப்பார்கள்.

------------------------------------------------------------------------------------

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி என்பதை நிரூபிக்கிறார் ஜெயமோகன். உண்மையில் அவர் எழுத்திலும் செயலிலும்தான் ஜாதி வெறி மேலோங்கி இருக்கும். ஆனால் அவர் தோழர் யமுனா ராஜேந்திரன், தோழர் புலியூர் முருகேசன் மற்றும் யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டூடியோ அருண் ஆகியோர் மீது ஜாதி வெறி பிடித்தவர்கள், தலித் எதிரிகள் என்று சகதியை அள்ளி வீசுகிறார்.

சீமானைப் போல, நாம் தமிழர் தம்பிகளைப் போல இவரும் அவர்களுடைய ஜாதி என்னவென்று டி.என். ஆராய்ச்சி செய்வார் போல இருக்கிறது. இவரை தோலுரித்த நூலின் மையப்புள்ளி தோழர் யமுனா ராஜேந்திரன், அதிலே ஒரு கட்டுரை எழுதியுள்ள தோழர் புலியூர் முருகேசன் ஆகியோர் மீது இவர் வெறுப்பாக இருக்க அனைத்து காரணங்களும் உண்டு. இதிலே தோழர் புலியூர் வேறு இவரது குண்டர் படை லட்சுமி, வெண்பா ஆகியோர் பதிவுகளில் அவ்வப்போது நக்கலாய் பின்னூட்டம் போடுவார். யுவகிருஷ்ணா இவரை சமீப காலத்தில் சீண்டியதாக நினைவில்லை. அருணுக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்தோ?

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி ஜாதி மோதலுக்கு அடித்தளமிடும் இந்த அற்பப் பதர்தான் எப்போதும் "அறம், அறம்" என்று கூச்சலிடுவது எவ்வளவு பெரிய நகை முரண்!

 

No comments:

Post a Comment