Tuesday, July 13, 2021

கொங்கு நாடு – இவர்கள் கிரிமினல்கள்.

 கொங்கு நாடு சர்ச்சை ஏதோ தின மலர் துவக்கியது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

 மு.க.ஸ்டாலின் முதல் முறையாக கோவை சென்ற போது இந்தியா முழுதும் உள்ள சங்கிகள் “கோ பேக்” என்று ட்ரெண்டிங்காக்க முயற்சி செய்த காலத்திலேயே தனி மாநிலம் என்ற பேச்சு தொடங்கி விட்டது.

 ஜூன் மாதம் இரண்டாம் தேதி ஒரு மத்யமர் குழு சங்கியின் பதிவை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பதிவை வேறு நிறத்தில் மீள் பதிவு செய்துள்ளேன். 

சங்கிங்க நெனப்புதான் . . .



கீழே உள்ளது “மத்யமர்” குழுவில் ஒரு சங்கியின் பதிவு.


 “நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்”  என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்.

 ஆனால் இங்கே சங்கிகளின் நெனப்பு நாட்டை கெடுப்பதாக உள்ளது.

 கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளை வென்ற மிதப்பாலும் ஸ்டாலின் திரும்பப் போக வேண்டும் என்பதை உ.பி,ம.பி,பீகார், மகாராஷ்டிரா சங்கிகள் உதவியோடு ட்ரென்டிங் ஆக்கிய திமிராலும்  இப்போது தனி மாநில கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

பாஜக கட்சியின் ரியல் எஸ்டேட் புரோக்கர் அணி போல இருக்கிறது. 

 தமிழகத்தின் 39 தொகுதிகளில் 38 ஐ வென்றதாலும் “கோ பேக் மோடி” என்பதை எப்போதும் சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆக்குவதால் தமிழ்நாட்டை தனி நாடாக பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கலாமா சங்கிகளே!

உங்களுக்காகத்தான் வடிவேலு "ரத்தம், தக்காளிச் சட்னி" என்று சொல்லி விட்டுப் போயுள்ளார். 

 எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள சங்கிகள், மக்கள் மன நிலை எப்படி என்பதை அறிய “குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல” தின மலர் மூலம் கொளுத்திப் போட்டுள்ளார்கள்.

 

முட்டாள் சங்கிகளைத் தவிர வேறு யாரும் தின மலர் செய்தி பார்த்து குதிக்காததாலும்   “தனித்தமிழ்நாடு” என்ற ரீதியில் எதிர்வினைகள் வந்ததாலும் இப்போது பாஜக பொறுப்பாளர் மூலம் அடக்கி வாசிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

 

அதனால் பிரச்சினை முடிந்து விட்டது என்று மெத்தனமாக இருக்கக் கூடாது. பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளை விட மோசமான ஆட்சியாளர்கள் உலகிலேயே கிடையாது.

 

அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதையும் செய்வார்கள். அவர்களுக்கு மக்களின் உணர்வு பற்றி கவலை கிடையாது. ஜனநாயக மரபுகள் மீது நம்பிக்கை கிடையாது. அதானி அம்பானிக்கும் லாபம் வருமென்றால் எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.

 

காஷ்மீரில் இப்படித்தான் நடந்தது என்பதை எந்நாளும் மறக்கக் கூடாது.

 

கொங்கு நாடு என்று உற்சாகமாக குதித்த முட்டாள் சங்கிகளுக்கு மட்டும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

 

யூனியன் பிரதேசம் என்பது வெறும் டம்மி. அதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.  எல்லாவற்றுக்கும் ஒன்றிய அரசிடம்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். கிரண் பேடி மாதிரி கிறுக்கு கவர்னரோ அல்லது லட்சத்தீவு பிரபுல் கோடா பட்டேல் போன்ற அயோக்கியனோ வாய்த்தால் அவ்வளவுதான், உங்களுக்கு  ஒற்றைப் பைசாவுக்குக் கூட பிரயோசனம் கிடையாது. 

 

இருப்பதையும் இழந்து பிச்சை எடுக்கலாம். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment